Headlines
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுமா? நெல்லையில் சபாநாயகர் அப்பாவு அதிரடி பேட்டி!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுமா? நெல்லையில் சபாநாயகர் அப்பாவு அதிரடி பேட்டி!

திருநெல்வேலி,நவ.1:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பொட்டல் என்னும் இடத்தில், இன்று (நவம்பர். 1) காலையில், அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு.அப்பாவு, சாதாரண முறையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:- “அதிமுகவிலிருந்து சட்ட மன்ற உறுப்பினர் செங்கோட்டையன் நீக்கம் செயயப்பட்டது தொடர்பாக, எந்தக்கடிதமும் இதுவரையிலும் சட்டப்பேரவைக்கு தரப்படவில்லை. அவ்வாறு கடிதம் கொடுக்கும் பட்சத்தில், அது குறித்து பரிசீலனை செய்யப்படும். அதிமுக அளிக்கும் ஆவணங்களின் அடிப்படையில், உரிய…

Read More
பிசான பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி மாவட்டத்தில், ஒரே நேரத்தில் பாபனாசம், மணிமுத்தாறு ஆகிய, இரண்டு அணைகளில் இருந்து, தண்ணீர் திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு!

பாசன பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி மாவட்டத்தில், ஒரே நேரத்தில் பாபனாசம், மணிமுத்தாறு ஆகிய, இரண்டு அணைகளில் இருந்து, தண்ணீர் திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலி,நவ.1:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், பாபனாசம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரண்டு அணைகளில் இருந்தும், நடப்பு பிசான பருவ சாகுபடிக்காகவும், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்காகவும், இன்று (நவம்பர்.1) காலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்இரா.சுகுமார் தலைமையில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், முன்னாள் சபாநாயகர் இரா. ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலையில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு,…

Read More
உடுமலை அருகே வெள்ளை செட்டிபாளையம் கிராமத்தில் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள்

உடுமலை அருகே வெள்ளை செட்டிபாளையம் கிராமத்தில் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள்.

உடுமலை நவம்பர் 01. ஊருக்கு நடுவில் சுகாதாரகேடு ஏற்படுத்திவரும் கோழிப்பன்னையைஅகற்ற கோரி வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆர்பாட்டம். தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் எச்சரிக்கை திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குப்பம்பாளையம் ஊராட்சிகுட்பட்ட வெள்ளை செட்டிபாளையத்தில் அம்மன் பார்ம்ஸ் என்ற தனியார் கோழிப்பன்னை செயல்பட்டு வருகிறது ஊருக்கு நடுவே செயல்பட்டுவரும் இந்த கோழிப்பன்னையால் ஊர் முழுதும் துர்நாற்றமும் ஈக்கள் தொந்தரவும் அதிகரித்து வருவதோடு ஊர் மக்கள் அடிக்கடி நோய் வாய்ப்படுவதும் வாடிக்கையாகி வந்துள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து…

Read More
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கன் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி , மடத்துக்குளம் வட்டாரம், கணியூர், ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் திராவிட மாடல் அரசின் '' நலம் காக்கும் ஸ்டாலின் '' மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கன் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி , மடத்துக்குளம் வட்டாரம், கணியூர், ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் திராவிட மாடல் அரசின் ” நலம் காக்கும் ஸ்டாலின் ” மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் , மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் ஆகியோர் துவக்கிவைத்தனர்.. இந்நிகழ்வில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி அவர்கள், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் அவர்கள் , மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் அவர்கள் , மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.சாகுல் அமிது, அரசு அதிகாரிகள், மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.. முகாமில் பீகார்…

Read More
சேலைகள் கட்டி வரப்புகளில் பாதுகாப்பு: காட்டுப்பன்றிகள் ஊடுருவலால் அலறல்

சேலைகள் கட்டி வரப்புகளில் பாதுகாப்பு: காட்டுப்பன்றிகள் ஊடுருவலால் அலறல்

உடுமலை அக்டோபர் 31. உடுமலை:காட்டுப்பன்றிகள் தாக்குதலில், இருந்து பயிர்களை காப்பற்ற, சேலை கட்டுவதற்கு மட்டும், ஏக்கருக்கு, 5 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.உடுமலை அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறி, கிராமங்களில், காட்டுப்பன்றிகள் கூட்டம் முகாமிட்டுள்ளன. அனைத்து வகையான சாகுபடிகளிலும், காட்டுப்பன்றிகளால், சேதம் ஏற்பட்டு வருகிறது. அறுவடைக்கு தயாராகும் போது, ஏற்படும் சேதத்தால், பொருளாதார சேதத்தை விவசாயிகள் சந்திக்கின்றனர். குறிப்பாக, மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை சாகுபடியில், அதிக சேதம் ஏற்படுகிறது. காட்டுப்பன்றிகளை விரட்ட…

Read More
மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழா

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழா

மதுரையில் தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தியை முன்னிட்டு கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழு திரு உருவ சிலைகள் பல கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி முன்னிட்டு பெண்கள் பால்குடம் மற்றும் முலப்பாரியை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் ஆக எடுத்து வந்தனர் . இந்த ஊர்வலத்தில் சிறுவர்கள் ஆடி ,பாடி நடனமாடிக் கொண்டு வந்தார்கள் சிலம்பாட்டம், மயிலாட்டம் போன்ற நாட்டுப்புற…

Read More
டி.ஆர்.பி., தேர்வு எழுதியவர்கள் வேதனை!

டி.ஆர்.பி., தேர்வு எழுதியவர்கள் வேதனை!

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர். பி.,) நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன தேர்வில், பிரதான பாடங்களில் அதிக மதிப் பெண்கள் பெற்ற தேர்வர்கள், தமிழ் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் வேதனையில் உள்ளனர். இதனால் அவர்கள் தமிழ் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வலியுறுத்தினர். மாநிலம் முழுவதும் அக்.12ல் முதுகலை பட் டதாரி ஆசிரியர் நியமன தேர்வை டி.ஆர்.பி., நடத்தியது. 1500பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் எழுதினர். முதன் முறையாக தமிழ்த் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்த்…

Read More
திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக, அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன், ஆலோசனை கூட்டம்! மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் இரா. சுகுமார் தலைமையில் நடைபெற்றது!

திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக, அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன், ஆலோசனை கூட்டம்! மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் இரா. சுகுமார் தலைமையில் நடைபெற்றது!

திருநெல்வேலி,அக்.29: நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்ட அரங்கில், வாக்காளர் பட்டியல் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடன், ஆலோசனை கூட்டம் இன்று (அக்டோபர்.29) காலையில், நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் இரா. சுகுமார், தலைமை வகித்தார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், “இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும்…

Read More
திருநெல்வேலியில், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில், "பசும்பொன்" உ.முத்துராமலிங்க தேவரின் 63-வது ஆண்டு, நினைவேந்தல் நிகழ்வு!

திருநெல்வேலியில், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில், “பசும்பொன்” உ.முத்துராமலிங்க தேவரின் 63-வது ஆண்டு, நினைவேந்தல் நிகழ்வு!

திருநெல்வேலி,அக்.29:-“சாதிய எண்ணம் கொண்டவன் அரசியலுக்கு வந்தால், நாடு நாசமாகிவிடும்!” என்று முழங்கிய, “தெய்வத்திருமகனார்” பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின், 63-ஆம் ஆண்டு “நினைவு” தினத்தை (அக்டோபர்.30) முன்னிட்டு, திருநெல்வேலி பாளையங்கோட்டை மகாராஜா நகரில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப் படத்திற்கு, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மண்டல தலைவர் தோழர் கண்மணி மாவீரன் வேளாளர் தலைமையில், “மலர் மாலை” அணிவித்து, “மரியாதை” செலுத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது, “திருநெல்வேலி சந்திப்பில் உள்ள, “அண்ணல்” அம்பேத்கர், “மகாகவி” சுப்பிரமணிய பாரதியார்,”பசும்பொன்”…

Read More
உடுமலையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஆமை மீட்பு.

உடுமலையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஆமை மீட்பு.

உடுமலை, அக் – 28. உடுமலை ஜெய்லானி நகரில் குடியிருப்பு பகுதியில் ஆமை ஒன்று புகுந்தது. இதனை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்த ஆமையை உயிருடன் பிடித்து உடுமலை வனத்துறை ஊழியர் காளிமுத்து வசம் ஒப்படைத்தனர்.

Read More