Headlines
திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான மாணவிகள் ஹாக்கி போட்டியை, துவக்கி வைத்த சபாநாயகர்! மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன், மேயர், துணைமேயர் பங்கேற்பு!

திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான மாணவிகள் ஹாக்கி போட்டியை, துவக்கி வைத்த சபாநாயகர்! மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன், மேயர், துணைமேயர் பங்கேற்பு!

திருநெல்வேலி, அக. 3:- நெல்லை பாளையங்கோட்டை, அண்ணா விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான மாணவிகள் ஹாக்கி போட்டியை, இன்று (அக்டோபர். 3) காலையில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, துவக்கி வைத்தார். துவக்க விழா நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தலைமை வகித்தார். திருநெல்வேலி நாடாளுமன்ற உறப்பினர் வழக்கறிஞர் சி. ராபர்ட் புரூஸ், நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன், துணை மேயர் கே. ஆர். ராஜூ…

Read More
கடலூர் : நர்ஸ் வீட்டில் ரூ 15 லட்சம் பணம் -நகை திருட்டு.!

கடலூர் : நர்ஸ் வீட்டில் ரூ 15 லட்சம் பணம் -நகை திருட்டு.!

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் அன்பழகன் இவரது மனைவி என் எல் சி பொது மருத்துவமனையில் தலைமை நர்ஸ்சாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 19 பவுன் நகை மற்றும் 5 வெள்ளி கொலுசு, கேமரா,ரூ 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றனர். அதன் மதிப்பு ரூ 15லட்சம் இருக்கும். இது குறித்து நெய்வேலி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி செய்தியாளர்…

Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டம் ஒன்பதாவது சோதனை சாவடியில், 2/10/2025 அன்று வன உயிரின வார விழா தொடங்கப்பட்டது..

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டம் ஒன்பதாவது சோதனை சாவடியில், 2/10/2025 அன்று வன உயிரின வார விழா தொடங்கப்பட்டது..

அதை முன்னிட்டு கேரளா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு , வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்தும், நெகிழிப்பைகள் பயன்பாட்டால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நெகிழியை தவிர்ப்போம்.! புவியை காப்போம்.! என்ற தலைப்பில் அமராவதி வனச்சரக அலுவலர் புகழேந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நெகிழிப்பைக்கு மாற்றாக மஞ்சப்பை வழங்கப்பட்டது.. இதில் உடுமலை வனச்சரக அலுவலர் வாசு, வனவர்கள், வன காவலர்கள் மற்றும் வனப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.

Read More
நாகர்கோவில் – கோட்டார் ரயிலடி திடலில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் 20-ஆவது ஆண்டு ஆயுத பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது..

நாகர்கோவில் – கோட்டார் ரயிலடி திடலில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் 20-ஆவது ஆண்டு ஆயுத பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது..

அக் 02 கன்னியாகுமரி – ஆட்டோ சங்க ஆயுத பூஜை விழா உற்சாகம் நாகர்கோவில் – கோட்டார் ரயிலடி திடலில் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் 20-ஆவது ஆண்டு ஆயுத பூஜை விழா நேற்று உற்சாகமாக நடைபெற்றது. விழாவில் திராவிட முன்னேற்ற கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் மாநில துணைச் செயலாளரும், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி பார்வையாளருமான வழக்கறிஞர் மு. சிவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் பி.எம்.சி. மோகன் (கிழக்கு மாவட்ட விவசாய…

Read More
முதலமைச்சர் கோப்பை 2025 சென்னை போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு பேருந்து பயணத்தை துவக்கி வைத்தல்..

முதலமைச்சர் கோப்பை 2025 சென்னை போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு பேருந்து பயணத்தை துவக்கி வைத்தல்..

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவி மாணவிகள் சென்னையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க பயணம் மேற்கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பேருந்து பயணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் கொடியாசித்து துவக்கி வைத்தார். அப்போது உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர். கோவை மாநகராட்சி மேயர் திருமதி ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் துறை சார்ந்த…

Read More
திருநெல்வேலியில், அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 157-வது பிறந்தநாள்.! பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை வளாகத்தில், கூட்டாக தூய்மைப்பணிகளை மேற்கொண்ட, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்.!

திருநெல்வேலியில், அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 157-வது பிறந்தநாள்.! பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை வளாகத்தில், கூட்டாக தூய்மைப்பணிகளை மேற்கொண்ட, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்.!

திருநெல்வேலி, அக்டோபர். 2:- “அண்ணல்” மகாத்மா காந்தியடிகளின், 157-வது பிறந்த நாளை முன்னட்டு, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர் மோனிகா ராணா உத்தரவின்பேரில், இன்று ( அக்டோபர். 2) மேலப்பாளையம் மண்டலம், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை காவலர்கள் குடியிருப்புப் பகுதியில், மாநகர் நல அலுவலர் (CITY HEALTH OFFICER) பொறுப்பு வகிக்கும் டாக்டர்.ராணி தலைமையில், மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் முன்னிலையில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 100 பேர் சிறைக்காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள்…

Read More
நாகர்கோவில் ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியில், தமிழ் துறை சார்பில் மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது..

நாகர்கோவில் ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியில், தமிழ் துறை சார்பில் மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது..

கன்னியாகுமரி, அக். 02 – இந்த விழாவில் திராவிட முன்னேற்ற கழகத்தின் கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மாநில துணை செயலாளரும், ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளருமான வழக்கறிஞர் மு. சிவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், இந்நிகழ்வில் தமிழ் துறையின் விரிவுரையாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பெருமளவில் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினருடன் இணைந்து டாக்டர் திரு. வேல்ராஜ் நிகழ்வில் பங்கேற்று மாணவிகளை வாழ்த்திப் பேசினார்….

Read More
சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து மேயர் ஆய்வு – பொதுமக்கள் பங்கேற்பு..

சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து மேயர் ஆய்வு – பொதுமக்கள் பங்கேற்பு..

நாகர்கோவில் மாநகராட்சி 24-வது வார்டுக்கு உட்பட்ட செம்மாங்குடி சாலையில் தார்சாலை அமைப்பதன் தொடர்பாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் ஆய்வினை மேற்கொண்டார்.உடன் மண்டல தலைவர் திருமதி.அகஸ்டினா கோகிலவாணி மாமன்ற உறுப்பினர் திருமதி. ரோஸிட்டா உதவி செயற்பொறியாளர் திரு.ரகுராமன் பகுதி செயலாளர் திரு.சேக்மீரான் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு. அகஸ்தீசன் செயற்குழு உறுப்பினர் திரு.சதாசிவம் கழக நிர்வாகிகள் திரு.சிவகுமார், திரு. ஆறுமுகம், திரு.கிருஷ்ணகுமார், திரு. ஜலீல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், துறை…

Read More
தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா : நற்கருணை தேர்பவனி நடைபெற்றது..

தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா : நற்கருணை தேர்பவனி நடைபெற்றது..

தென்காசி, அக் – 01 – தென்காசியில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா வை முன்னிட்டு நற்கருணை தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல பெருவிழாவில் நேற்று இரவில் தேர் பவனி நடைபெற்றது. இதில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் பங்கேற்றனர். தென்காசியில் பிரசித்தி பெற்ற புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத் திருவிழா கடந்த 20ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் ஒவ்வொருநாளும் காலை,…

Read More
"TAMILNADU SCIENTIST AWARD" நிகழ்ச்சியில் : உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கோ.வி.செழியன்..

“TAMILNADU SCIENTIST AWARD” நிகழ்ச்சியில் : உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கோ.வி.செழியன்..

நீலகிரி மாவட்டம் உதகையில் 30.9.2025 நடைபெறும் “TAMILNADU SCIENTIST AWARD” நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க உதகைக்கு இன்று வருகை தந்த, உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கோ.வி.செழியன் அவர்களை உதகை தமிழகம் அரசு விடுந்தினர் மாளிகையில், மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். உடன் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், தம்பி இஸ்மாயில், உதகை நகர செயலாளர்கள் ஜார்ஜ், ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன்,…

Read More