ரேக்ளா காளை ரூ. 30 லட்சத்துக்கு விற்பனை.. காங்கேயம் மயிலைக்கு மவுசு..
உடுமலை, அக்டோபர் 12- உடுமலை அருகே மருள்பட்டியில் ரேக்ளா பந்தயத்திற்கு பயன்படும் காங்கேயம் இன காளை தமிழகத்திலேயே அதிகபட்சமாக ரூ 30 லட்சத்துக்கு விற்பனை ஆகி உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் ரேக்ளா பந்தயத்திற்காக அதிக அளவு காங்கேயம் இன காளைகள் வளர்த்து வருகின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிக அளவு ரேக்ளா பந்தயங்களில் இந்த காளைகள் பங்கேற்கின்றன. உடுமலை அருகே உள்ள மருள் பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹரி வீரராகவன்…
