கடலூர்; அரசு பேருந்து மோதி உடல் நசுங்கி ஒருவர் பலி..!
கடலூர் மாவட்டம் நெய்வேலி, வட்டம் 20 சீனிவாசன் பகுதியை சார்ந்த டி.கணேசன் வயது (51) என்எல்சி நிறுவனத்தின் சுரங்கம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்று பண்ருட்டி -கும்பகோணம் சாலையில் கண்ணுதோப்பு பாலம் அருகே பைக்கில் சென்றப்போது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நெய்வேலி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட நிருபர்: R. விக்னேஷ்
