Headlines
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில், மழைநீர் தடுப்பு பணிகளை,மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், நேரில் பார்வையிட்டு ஆய்வு!

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில், மழைநீர் தடுப்பு பணிகளை,மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், நேரில் பார்வையிட்டு ஆய்வு!

திருநெல்வேலி,அக்.14:-வடகிழக்குப் பருவ மழை, துவங்கயுள்ளதை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில், மழைநீர் நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, மழை நீர் ஓடைகளை தூர்வாரும் பணிகள், மழைநீர் செல்லும் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகள் மற்றும் கழிவுநீர் ஓடையில் தேங்கியுள்ள, மண் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகள் ஆகியன, தற்போது நெல்லை மாநகராட்சியில் மொத்தமுள்ள, திருநெல்வேலி, தச்சநல்லூர், பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் ஆகிய நான்கு மண்டலப் பகுதிகளிலும், மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அதன்படி,…

Read More
மதுரை தெருவில் சாக்கடை அடைப்பால் தெருவில் உள்ள மக்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி.

மதுரை தெருவில் சாக்கடை அடைப்பால் தெருவில் உள்ள மக்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி.

மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள அசோக் நகர் மூன்றாவது தெருவில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு தெரு முழுவதும் கழிவு நீர் வெளியேறி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக பொதுமக்கள் எவ்வளவோ போராடியும் மதுரை மாநகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும், இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு அதனால் வெளியே வரும் கழிவு நீரால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வாந்தி ,மயக்கம் ,காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல்…

Read More
ஆட்சியாளரிடமிருந்து சமூக சேவகர் விருது

ஆட்சியாளரிடமிருந்து சமூக சேவகர் விருது.

மதுரையில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற உரிமை மீட்பு சங்கம் சார்பாக நடைபெற்ற தீபாவளி பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.K.J.பிரவீன் குமார் அவர்கள் கலந்து கொண்டார் இந்த விழாவில் சே.ஷேக் மஸ்தான் அவர்களுக்கு சமூக ஆர்வலர் விருது வழங்கப்பட்டது மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
பண்டிகை காலங்களில் கைத்தறி ஆடைகளுக்கு பொதுமக்கள் ஆதரவை எதிர்பார்க்கும் நெசவு தொழிலாளர்கள்.

பண்டிகை காலங்களில் கைத்தறி ஆடைகளுக்கு பொதுமக்கள் ஆதரவை எதிர்பார்க்கும் நெசவு தொழிலாளர்கள்.

உடுமலை: அக்டோபர் 14. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கைத்தறி ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் வாங்கினால் பல்வேறு இடையூறுகளை சந்தித்தும் பாரம்பரியமாக கைத்தறி நெசவு செய்யும் தங்கள் குடும்பத்தினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என நெசவுத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். உடுமலை, வாளவாடி, பூளவாடி, மலையாண்டிபட்டினம், புக்குளம், குரல் குட்டை, உள்ளிட்ட கிராமங்களில் பாரம்பரியமான கைத்தறி நெசவில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.வருவாய் குறைவு, அங்கீகாரம் இல்லாத மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்காமல் பல்வேறு பாதிப்புகளை…

Read More
தீயணைப்பு துறையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மடத்துக்குளத்தில் தீயணைப்பு துறையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் மடத்துக்குளம் நிலையம் சார்பாக கற்றுக்கொள்வோம் வாருங்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் பொது மக்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பேரிடர் காலங்களில் எச்சரிக்கை நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்..

Read More
நகராட்சி ஆணையாளர் போர்கால அடிப்படையில் அதிரடி நடவடிக்கை.

நகராட்சி ஆணையாளர் போர்கால அடிப்படையில் அதிரடி நடவடிக்கை.

குன்னூர் : அக்டோபர் : 14 ரேலியா டேம் நீர்மட்டம் குறைந்த நிலையில் வறண்ட பகுதியில் தேங்கியுள்ள சேறு சகதிகளை அகற்றீ நீர்நிலையை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது. குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான ரேலியா டேம் நீர்மட்டம் குறைத்துள்ளதை நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி தலைமையில் நகராட்சி பொறியாளர், பணி மேற்பார்வையாளர் மற்றும் ஒப்பந்ததாரருடன் இணைந்து சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது. கடந்த மாதங்களில் மழை இல்லாத காரணத்தால், தற்போதைய நீர் இருப்பு 43 அடியிலிருந்து 20 அடியாக குறைந்துள்ளது. தற்போது,…

Read More
கடைசி புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு: வெகு விமர்சியாக பஜனை நிகழ்ச்சி..

கடைசி புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு: வெகு விமர்சியாக பஜனை நிகழ்ச்சி..

உடுமலை தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள அந்தியூர் பகுதியில் 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகம் கோத்திரம் அந்தியூர் பூர்வீக மம்முடியார்களின் குலதெய்வம் ஸ்ரீ பெருந்தேவியர் சமயோத ஸ்ரீ வரதராஜா ஸ்ரீ கன்னியம்மன் திருக்கோவில் கடைசி புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு வெகு விமர்சியாக பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.

Read More
உடுமலையில் தக்காளி விலை தொடர் சரிவு- குளிர்பதன கிடங்கு ஜாம் தொழிற்சாலை அமைக்க கோரிக்கை..

உடுமலையில் தக்காளி விலை தொடர் சரிவு- குளிர்பதன கிடங்கு ஜாம் தொழிற்சாலை அமைக்க கோரிக்கை..

உடுமலை, அக்டோபர் 12- திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காளிசாகுபடி ஆண்டுதோறும் விவசாயிகள் செய்து வருகின்றனர். தக்காளி சாகுபடிக்கு தக்காளி நாற்று , உரம் கூலி மற்றும் களை எடுத்தல் உட்பட ஏக்கருக்கு 50 ஆயிரத்துக்கு மேல் செலவு ஆகும் நிலையில் உடுமலை தினசரி சந்தைக்கு தக்காளி பழங்களை கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் இருந்து தக்காளி பழங்கள் அதிக…

Read More
ரேக்ளா காளை ரூ. 30 லட்சத்துக்கு விற்பனை.. காங்கேயம் மயிலைக்கு மவுசு..

ரேக்ளா காளை ரூ. 30 லட்சத்துக்கு விற்பனை.. காங்கேயம் மயிலைக்கு மவுசு..

உடுமலை, அக்டோபர் 12- உடுமலை அருகே மருள்பட்டியில் ரேக்ளா பந்தயத்திற்கு பயன்படும் காங்கேயம் இன காளை தமிழகத்திலேயே அதிகபட்சமாக ரூ 30 லட்சத்துக்கு விற்பனை ஆகி உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் ரேக்ளா பந்தயத்திற்காக அதிக அளவு காங்கேயம் இன காளைகள் வளர்த்து வருகின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிக அளவு ரேக்ளா பந்தயங்களில் இந்த காளைகள் பங்கேற்கின்றன. உடுமலை அருகே உள்ள மருள் பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹரி வீரராகவன்…

Read More
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், முனைஞ்சிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், மாவடட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், முனைஞ்சிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், மாவடட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!

திருநெல்வேலி,அக்.11:- கிராமப்புற மக்கள் தங்களுடைய உரிமைகளை அறிந்திடவும், தங்களுடைய தேவைகளை கோரி பெற்றிடவும், ஆண்டு தோறும் தமிழ்நாட்டில், ஜனவரி 26, மார்ச் 22, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, நவம்பர் 1- ஆகிய ஆறு முறைகள், கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தவிர, சில நேரங்களில் சிறப்பு கிராம சபை கூட்டங்களும், நடத்தப்படுகின்றன. அதன் அடிப்படையில்,”காந்தி ஜெயந்தி” தினத்தில் (அக்டோபர். 2) நடத்தப்பட வேண்டிய கிராமசபை கூட்டங்கள், நிர்வாக காரணங்களுக்காக, இன்று…

Read More