Headlines
சோழன் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுமி! - அணையாடி சான்ஜோ பள்ளியில் பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு...

சோழன் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுமி! – அணையாடி சான்ஜோ பள்ளியில் பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு…

கன்னியாகுமரி, அக்.30 அணையாடி சான்ஜோ ஆங்கில மீடியம் சி.பி.எஸ்.சி பள்ளிக்கூடத்தில் வைத்து சிறுவர், சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமையைத் தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அந்த பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் கராத்தே பயிற்சி மாணவி எம்.அக்ஷயா, டைவ் அடித்தபடி தன்னுடைய தலையால் 201 ஓடுகளை உடைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதன் மூலம் அவர் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சோழன் உலக சாதனை புத்தகத்தின்…

Read More
டி.ஆர்.பி., தேர்வு எழுதியவர்கள் வேதனை!

டி.ஆர்.பி., தேர்வு எழுதியவர்கள் வேதனை!

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர். பி.,) நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன தேர்வில், பிரதான பாடங்களில் அதிக மதிப் பெண்கள் பெற்ற தேர்வர்கள், தமிழ் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் வேதனையில் உள்ளனர். இதனால் அவர்கள் தமிழ் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வலியுறுத்தினர். மாநிலம் முழுவதும் அக்.12ல் முதுகலை பட் டதாரி ஆசிரியர் நியமன தேர்வை டி.ஆர்.பி., நடத்தியது. 1500பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் எழுதினர். முதன் முறையாக தமிழ்த் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்த்…

Read More
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து கலந்துரையாடல்...

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து கலந்துரையாடல்…

கன்னியாகுமரி, அக்.30: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று (29.10.2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். இந்த சந்திப்பில் வருவாய் கோட்ட அதிகாரி காளீஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். வாக்காளர் பட்டியலில் புதுப்பிப்பு, பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகள் சீராக நடைபெற தேவையான…

Read More
திருநெல்வேலியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் நடத்தப்பட்ட, பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம்!

திருநெல்வேலியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் நடத்தப்பட்ட, பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம்!

திருநெல்வேலி,அக்.29:-“தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்” (DGP) உத்தரவுப்படி, “பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண் காணிப்பாளர்களால், நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று (அக்டோபர்.29) காலையில்,பாளையங்கோட்டை “மிலிட்டரி லைன்” பகுதியில் உள்ள,திருநெல்வேலி மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அலுவலகத்தில், “மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” நை.சிலம்பரசன் தலைமையில், “பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்” நடைபெற்றது. கூட்டத்தில், மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து, மாவட்ட…

Read More
திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக, அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன், ஆலோசனை கூட்டம்! மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் இரா. சுகுமார் தலைமையில் நடைபெற்றது!

திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக, அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன், ஆலோசனை கூட்டம்! மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் இரா. சுகுமார் தலைமையில் நடைபெற்றது!

திருநெல்வேலி,அக்.29: நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்ட அரங்கில், வாக்காளர் பட்டியல் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடன், ஆலோசனை கூட்டம் இன்று (அக்டோபர்.29) காலையில், நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் இரா. சுகுமார், தலைமை வகித்தார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், “இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும்…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், 1028 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப் படவுள்ள, தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, துறைசார்ந்த அதிகாரிகளுடன் நெல்லையில் சபாநாயகர் அப்பாவு கலந்தாய்வு!

திருநெல்வேலி மாவட்டத்தில், 1028 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப் படவுள்ள, தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, துறைசார்ந்த அதிகாரிகளுடன் நெல்லையில் சபாநாயகர் அப்பாவு கலந்தாய்வு!

திருநெல்வேலி,அக்.28:- திருநெல்வேலி மாவட்டத்தில், 605 கோடி ரூபாய் மதிப்பில், பாளையங்கோட்டை, நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், சேரன்மகாதேவி மற்றும் களக்காடு ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 831 ஊரக குடியிருப்புகளில் நடைபெற்று வரும், “தாமிரபரணி” கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகள் குறித்தும், 423.13 கோடி மதிப்பில், களக்காடு நகராட்சி, பணகுடி, வடக்கு வள்ளியூர், திருக்குறுங்குடி, ஏர்வாடி, திசையன்விளை, நாங்குநேரி மற்றும் மூலைக்கரைப்பட்டி ஆகிய, 7 பேரூராட்சிகளில் நடைபெற்று வரும், கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகள் குறித்தும், இன்று (அக்டோபர்.28) நெல்லை மாவட்ட ஆட்சியர்…

Read More
உடுமலையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஆமை மீட்பு.

உடுமலையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஆமை மீட்பு.

உடுமலை, அக் – 28. உடுமலை ஜெய்லானி நகரில் குடியிருப்பு பகுதியில் ஆமை ஒன்று புகுந்தது. இதனை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்த ஆமையை உயிருடன் பிடித்து உடுமலை வனத்துறை ஊழியர் காளிமுத்து வசம் ஒப்படைத்தனர்.

Read More
முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்...

முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்…

உடுமலைஅக்டோபர் 28. உடுமலை அக்.28-உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க கூட்டம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன் ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் நாயப் சுபேதார்நடராஜ் வரவேற்றார். சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் முன்னிலையில் வகித்தார். இதில் சிறப்புஅழைப்பாளராக கர்னல் நாகராஜ், சித்ராநாகராஜ், ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்….

Read More
உடுமலையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசன்ன விநாயகர் கோவிலில் முருகனுக்கு திருக்கல்யாணம்: இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்...

உடுமலையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசன்ன விநாயகர் கோவிலில் முருகனுக்கு திருக்கல்யாணம்: இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்…

உடுமலை, அக்டோபர் 28- திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ் பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 22-ம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று முக்கிய நிகழ்வாக சூரசம்ஹார விழா வெகு சிறப்பாக நடைபெற்றது .இந்த நிலையில் இன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக பால்,சந்தனம்,தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், மஞ்சள்,பன்னீர்,பழரசம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு வள்ளி தெய்வானை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த…

Read More
நெல்லை மாநகராட்சியின், நான்கு மண்டலங்களிலும், மொத்தமுள்ள 55 வார்டுகளிலும் நடைபெற்ற, சிறப்பு கூட்டங்கள்! மேயர் மற்றும் மண்டலத்தலைவர்கள் பங்கேற்பு!

நெல்லை மாநகராட்சியின், நான்கு மண்டலங்களிலும், மொத்தமுள்ள 55 வார்டுகளிலும் நடைபெற்ற, சிறப்பு கூட்டங்கள்! மேயர் மற்றும் மண்டலத்தலைவர்கள் பங்கேற்பு!

திருநெல்வேலி,அக்.28:-தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, திருநெல்வேலி மாநகராட்சியில், பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மண்டலங்களிலும் சேர்த்து, மொத்தம் உள்ள 55 வார்டுகளிலும், மாநகராட்சி ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர்.மோனிகா ராணா அறிவுறுத்தலின் படி, இன்று (அக்டோபர். 28) வார்டு சிறப்பு கூட்டங்கள் நடைபெற்றன. அதன்படி, ஆங்காங்கே நடைபெற்ற கூட்ங்களுக்கு, அந்தந்த வார்டுகளின், மாமன்ற உறுப்பினர்கள் தலைமை வகித்தனர். திருநெல்வேலி மண்டலம் 25-வது வார்டில், வடக்கு மவுண்ட் ரோட்டில் உள்ள, தனியார் திருமண மண்டபத்தில்,25-வது வார்டு…

Read More