விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் விழுப்புரத்தில் மாம்பழபட்டு சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் சி.மாரிமுத்து அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஒன் ஸ்டெப் யூனிட்டி காப்பாளர் விவேக் கிராம மேம்பாட்டு பவுண்டேஷன் ஆப் இந்தியா ஆலோசகர் அறவழி மாநில பொதுச்செயலாளர் எஸ் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாய்ந்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது….
