Headlines
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி…

மதுரை, சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு இல்ல மேலாளர் கிரேசியஸ் தலைமை தாங்கினார். செல்வபிரமா ஏஜென்சி நிறுவனர் செந்தில்குமார், முருகேச பாண்டியன், மற்றும் சமூக ஆர்வலர்கள் ஷேக் மஸ்தான் மற்றும் நூருல்லாஹ் ஆகியோர் இணைந்து 30 தவழும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மாவட்ட செயலாளர் ராவியத் பேகம் ஒருங்கிணைத்தார். நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். மதுரை மாவட்ட செய்தியாளர் –…

Read More
வன உயிரின வார விழா நிறைவு விழா கன்னியாகுமரியில் சிறப்பாக நடைபெற்றது..

வன உயிரின வார விழா நிறைவு விழா கன்னியாகுமரியில் சிறப்பாக நடைபெற்றது..

ஆக் 08; கன்னியாகுமரி – கன்னியாகுமரி, வன உயிரின வார விழாவின் இறுதி நாளான இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் திருமதி.அழகுமீனா, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சி அலுவலகம் நாஞ்சில் கூடாரத்தில் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வன உயிரின வாரத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முனைவர் அ. அன்பு, இ.வ.ப., உதவி…

Read More
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.மோனிகா ராணா, மேலப்பாளையம் மற்றும் தச்சநல்லூர் மண்டல பகுதிகளில், வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் சுகாதார பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.மோனிகா ராணா, மேலப்பாளையம் மற்றும் தச்சநல்லூர் மண்டல பகுதிகளில், வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் சுகாதார பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..!

திருநெல்வேலி, அக். 8:-திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர் மோனிகா ராணா, இன்று (அக்டோபர். 8) மேலப்பாளையம் மண்டலப் பகுதியில் 31-வது வார்டில் உள்ள, முத்துமாரியம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டிருக்கும் சிமெண்ட் சாலைகள் 45-வது வார்டில் பள்ளிக்கூடம் தெரு, 48-வது வார்டில், பீடித்தொழிலாளர் காலனி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தார் சாலைகள் ஆகியவற்றை, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். முக்கியமாக, இந்தப்பகுதிகளில் போடப்பட்டுள்ள சாலைகளின் தரத்தினை, உன்னிப்பாக அவர், ஆய்வு மேற்கொண்டார். தச்சநல்லூர் மண்டலத்தில், மாநகராட்சிக்கு…

Read More
பனை விதை நடும் விழா – ஐயங்குளம் குளக்கரையில் நடைபெற்றது.

பனை விதை நடும் விழா – ஐயங்குளம் குளக்கரையில் நடைபெற்றது.

அக் 08; கன்னியாகுமரி- கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்தின் வனப்பணியாளர்கள் மற்றும் லீபுரம் கிராம பஞ்சாயத்து MGNREGS பணியாளர்கள் இணைந்து இன்று காலை ஐயங்குளம் குளக்கரையில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பனையின் நேரடி மற்றும் மறைமுக நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பனை மரம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், நீர் வளம் பேணுவதற்கும், இயற்கை பேரழிவுகளைத் தடுப்பதற்கும் பெரும் பங்கு வகிப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வனப்பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள்…

Read More
நீலகிரியில் புதிய வரலாறு — சுற்றுலா வாகன ஓட்டியாக கங்கா, மாவட்டத்தின் முதல் பெண்மணி!

நீலகிரியில் புதிய வரலாறு — சுற்றுலா வாகன ஓட்டியாக கங்கா, மாவட்டத்தின் முதல் பெண்மணி!

நீலகிரி மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றப் பாதையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. சேரிங்கிராஸ் பகுதியைச் சேர்ந்த கங்கா என்ற இளம் பெண், சுற்றுலா வாகன ஓட்டியாக (Tourist Vehicle Driver) பணியில் சேர்ந்துள்ளார். இதன்மூலம், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கான நான்கு சக்கர வாகனம் ஓட்டும் முதல் பெண்மணி என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் பல பெண்கள் ஆட்டோ ஓட்டுநர்களாக பணியாற்றி வந்தாலும், சுற்றுலா வாகன ஓட்டுனராக கங்கா புதிய வழியை திறந்து வைத்துள்ளார்….

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்ற, "உங்களுடன் ஸ்டாலின்!"திட்ட சிறப்பு முகாம்களை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலி மாவட்டத்தில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்ற, “உங்களுடன் ஸ்டாலின்!”திட்ட சிறப்பு முகாம்களை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலி,அக்.7:- திருநெல்வேலி மாநகர் மாவட்டம், பாளையங்கோட்டை தியாகராஜ நகர் மற்றும் புறநகர் மாவட்டம் பாப்பான்குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளன்குளம் ஆகிய இடங்களில், இன்று (அக்டோபர். 7) “உங்களுடன் ஸ்டாலின்!” திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இவ்விரு முகாம்களையும், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், கூறியதாவது:- ” உங்களுடன் ஸ்டாலின்!” திட்ட சிறப்பு முகாம்கள், மாநிலம் முழுவதுமுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் பகுதிகளில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் என,…

Read More
யானை தந்ததை சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயற்சி

யானை தந்ததை சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயற்சி.

மதுரையில் யானை தந்தத்தை சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயன்ற இடைத்தரகர்கள் மணிகண்டன், சுதாகர், ரகுநாத், சுப்பிரமணி, ரமேஷ் ஆகிய 5 பேர் கைது. ஜமீன் குடும்ப வாரிசான வடமலை ராஜபாண்டியன் என்பவர் மூலமாக யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்றதாக அவர்கள் வாக்குமூலம். தற்போது ஜமினின் வாரிசு தலைமறைவு, அவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்! மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
ராமாபுரத்தில் 2,000 பனை விதைகள் நட்டு விழா..வனத்துறை – கிராமபஞ்சாயத்து இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை..!

ராமாபுரத்தில் 2,000 பனை விதைகள் நட்டு விழா..வனத்துறை – கிராமபஞ்சாயத்து இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை..!

கன்னியாகுமரி, அக்.07: இன்று காலை கன்னியாகுமரி வனக்கோட்டம் உதவி வனப்பாதுகாவலர் அவர்களின் தலைமையில், வனத்துறை மற்றும் ராமாபுரம் கிராமபஞ்சாயத்து சார்பில் MGNREGA பணியாளர்கள் இணைந்து பனை மர நட்டுப் பணிகள் நடைபெற்றன. ராமசமுத்திரம் குளக்கரையில் மொத்தம் 2,000 பனை விதைகள் நட்டுவிடப்பட்டன.சுற்றுச்சூழல் சமநிலையை பேணவும், நீர்வளத்தை பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, உள்ளூர் மக்களால் பாராட்டப்படுகிறது. வனத்துறை அதிகாரிகள், பனை மரங்கள் மழை நீர் உறிஞ்சுதலிலும், மண் அரிப்பைத் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தனர். தமிழக…

Read More
நாகர்கோவில் மாமன்றம் “ஃபார்முலா” லீக்!

நாகர்கோவில் மாமன்றம் “ஃபார்முலா” லீக்!

அக் 07, கன்னியாகுமரி – நாகர்கோவில் மாமன்ற 39ஆம் வார்டு உறுப்பினராக இருக்கும் பாத்திமா ஹிதாயத் அவர்களின் கணவர் ஹிதாயத் தற்போது நகரம் முழுவதும் பேசப்படும் நபராக மாறியுள்ளார். பொதுமக்களிடமிருந்து “அத்தியாவசிய தேவைகளுக்காக” பல ஆயிரம் ரூபாய்கள் முதல் லட்சங்கள் வரை பெற்றுக்கொண்டு, தேவைகள் நிறைவேற்றாமல் பின் தட்டி கழிப்பவர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ஹிதாயத்துடன் ஒரு பெண் பேசிய ஆடியோ வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண், “நான் கொடுத்த ₹17,000க்கு ரசீது தரவே…

Read More
சி.ஐ.டி.யு சுமை பணி தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்..

சி.ஐ.டி.யு சுமை பணி தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்..

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு சுமை பணி தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட குன்னூர் வண்டிச்சோலை பகுதியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு அச்சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் C.வினோத் கண்டன உரையாற்றினார் டாஸ்மாக் மாவட்ட தலைவர் J.ஆல்துரை சி.ஐ.டி.யு மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் வாழ்த்துரை வழங்கினர். அதில் டாஸ்மாக் குடோன் சுமை பணி தொழிலாளர்கள் அனைவரும் கலந்து…

Read More