திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில், 19 கோடி ரூபாய் மதிப்பிலான, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைத்த சபாநாயகர் அப்பாவு! நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பங்கேற்பு!
திருநெல்வேலி,நவ.22:- தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, நேற்று {நவம்பர்.21} காலையில், தன்னுடைய சொந்த தொகுதியான, திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில், “கூட்டப்புளி” மீனவக் கிராமத்தில், 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பிலான, “கடல் பொருட்கள் மதிப்புக்கூட்டு மையம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம்” அமைக்கும் பணி,”கூத்தன்குழி” மீனவக்கிராமத்தில், 2 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான “மீன் இறங்கு தளம்” அமைக்கும் பணி, “விஜயாபதி” மீனவக் கிராமத்தில், 14 கோடியே…
