திருநெல்வேலி மாவட்டத்தில், வாக்காளர்களால் நிரப்பி கொடுக்கப்பட்ட படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின், கைபேசி செயலியில் பதிவேற்றும் செய்யும் பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!
திருநெல்வேலி,நவ.22:- இந்திய தலைமை தேர்தல் ஆணையமானது, 2020 ஜனவரி 1- ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தங்களை மேற்கொள்ள, அறிவுறுத்தியுள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில், வாக்காளர்களால் நிரப்பிக் கொடுக்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களை, வாககுச்சாவடி நிலை அலவலர்களின் கைபேசி செயலியில், பதிவேற்றம் செய்யும் பணிகள், தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை, பாளையங்கோட்டை மண்டல அலுவலகம்,…
