Headlines
திருநெல்வேலியில் நடைபெற்ற,72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின், மாநில அளவிலான நிறைவு நிகழ்ச்சி! கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் பங்கேற்று, 12 ஆயிரம் பேருக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, வழங்கினார்!

திருநெல்வேலியில் நடைபெற்ற 72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின் மாநில அளவிலான நிறைவு நிகழ்ச்சி! கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் பங்கேற்று 12 ஆயிரம் பேருக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!

திருநெல்வேலி,நவ.20:- மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், இம்மாதம் {நவம்பர்} 14- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த, 72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின் நிறைவு நிகழ்ச்சி, இன்று (நவம்பர். 20) காலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை, நேருஜி சிறுவர் கலையரங்கில் நடைபெற்றது. சபாநாயகர் மு. அப்பாவு தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க. நந்த குமார், கூடுதல் பதிவாளர் மு. வீரப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்…

Read More
திருப்பரங்குன்றம் மலையில் நீதிபதி ஆய்வின்போது பறந்த டிரோன் பறிமுதல் யூடியூபர் மீது வழக்கு

திருப்பரங்குன்றம் மலையில் நீதிபதி ஆய்வின்போது பறந்த டிரோன் பறிமுதல் யூடியூபர் மீது வழக்கு

திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நேற்று முன்தினம் மாலை திருப்பரங்குன்றம் மலை மீது சென்று சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்தார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆய்வு செய்தபோது மலையின் மேல் பகுதியில் டிரோன் கேமரா ஒன்று பறந்து படம் பிடித்துக் கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார், டிரோன் கேமரா குறித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த டிரோன் கேமரா, மதுரை…

Read More
திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து ரீல்ஸ் செய்த நபர்கள் கைது.

திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து ரீல்ஸ் செய்த நபர்கள் கைது.

திண்டிவனம் : நவம்பர், 20. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து, எக்ஸ்பிரஸ் ரயில் பழுதுக்கு காரணமான 5 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை – காரைக்குடி இடையே தினசரி இயங்கி வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 9ம் தேதி மதியம், சென்னை எக்மோரிலிருந்து புறப்பட்டு வந்தது. இந்த ரயில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை கடந்து வந்தபோது, திடீரென ரயில் இன்ஜினில் சத்தம் எழுந்ததால், விக்கிரவாண்டி…

Read More
குருசடியில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழாநாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா சிறப்பு விருந்தினர்.

குருசடியில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழாநாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா சிறப்பு விருந்தினர்.

நாகர்கோவில்; நவ.20 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் குருசடி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ–மாணவியருக்கான இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடை பெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இதன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் ஏற்படும் சிரமம் குறைக்கப்பட்டு, கல்வியில் மேலும் முன்னேற்றம் பெறுவார்கள் என அவர் தெரிவித்தார். தலைமையாசிரியர் அருட்சகோதரி பேரின்பாபாய், ஆசிரியர்கள்,…

Read More
காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு வனத்துறை அளித்த நிவாரண நிதி.

காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு வனத்துறை அளித்த நிவாரண நிதி.

நீலகிரி : நவம்பர்,20. முதுமலை புலிகள் காப்பகம் நீலகிரி வனக்கோட்டம் குந்தா வனச்சாரகம் குந்தா பிரிவு கெத்தை காவல் பகுதிக்கு உட்பட்ட பிரசன்ட் வேலி தனியார் பண்ணை வீட்டின் அருகே விவசாயப் பகுதியில் கடந்த 29 8 2025 ஆம் நாள் காட்டு யானை தாக்கி உயிரிழந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான பேர்லி சுதந்திர ராவ் என்பவருக்கு ஈம சடங்கிற்கு வனத்துறை மூலம் அன்றைய தினமே ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்த நிலையில் இன்று 20.11.2025…

Read More
கடலூர் : ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி.

கடலூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி.

கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திராநகர் பகுதியை வசிப்பவர் அசோக்குமார் வயது (44). மனநலம் பாதிக்கபட்ட இவர் நேற்று வடலூர் காட்டுக்கொல்லை இரல்வே கேட் அருகில் காரைக்கால் நோக்கி சென்ற ரயில் முன் பாயிந்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது இடது கால் துண்டான நிலையில், அவரை மீட்ட அக்கம்பக்கதினர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து கடலூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் R. விக்னேஷ்

Read More
மதுரை ஜெயில் காளியம்மன் கோயிலில் கார்த்திகை அமாவாசை சிறப்பு பூஜை – பக்தர்களுக்கு அன்னதானம்

மதுரை ஜெயில் காளியம்மன் கோயிலில் கார்த்திகை அமாவாசை சிறப்பு பூஜை – பக்தர்களுக்கு அன்னதானம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஜெயில் காளியம்மன் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் மிகுந்த பக்தி உணர்வுடன் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக வந்து அம்மன் தரிசனம் செய்து வழிபாடு செய்தனர். பூசாரிகளால் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில் முழுவதும் பஜனை, தீப ஒளி ஆகியவை ஆன்மிகச் சூழலை இன்னும் மேம்படுத்தின. பூஜைகள் முடிந்த பின்னர், பக்தர்களுக்காக அன்னதான ஏற்பாடுகள்…

Read More
உடுமலைப்பேட்டைக்கு கொண்டுவரப்பட்ட ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை க்கு உற்சாக வரவேற்பு !

உடுமலைப்பேட்டைக்கு கொண்டுவரப்பட்ட ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை க்கு உற்சாக வரவேற்பு !

உடுமலைநவம்பர் 19. ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி வருகின்ற 28 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. உலகின் தலைசிறந்த 24 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய ஹாக்கி சம்மேளனம் இணைந்து நடத்துகிறது. இதற்கான கோப்பை கடந்த பத்தாம் தேதி சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழக முழுவதும் வலம் வந்து…

Read More
உடுமலையில் மண்டல அளவிலான தனித்திறன்சிலம்ப போட்டிகள்…

உடுமலையில் மண்டல அளவிலான தனித்திறன்சிலம்ப போட்டிகள்…

உடுமலைநவம்பர் 19. திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் உடுமலை ஜீவா சிலம்பம் அசோசியேசன் இணைந்து மண்டல அளவிலான தனித்திறன் சிலம்பாட்டப் போட்டிகள் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஒற்றைக்கம்பு,சிலம்பம் சுற்றும் முறை, இரட்டைக் கம்பு சிலம்பம் சுற்றும் முறை, என்ற பிரிவுகளில் ஐந்து வயது முதல் 16 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஒற்றைக்கம்பு சுழற்றும் பிரிவில் ஆர் ஜி எம் மெட்ரிக்…

Read More
திருநெல்வேலியில், மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள்!

திருநெல்வேலியில், மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள்!

திருநெல்வேலி,நவ.19:- தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், “மக்கள் குறை தீர்க்கும் நாள்” கூட்டங்கள், ஒவ்வொரு புதன்கிழமையும், அந்தந்த மாவட்ட மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று {நவம்பர்.19} புதன் கிழமை திருநெல்வேலியில், பாளையங்கோட்டை “அண்ணா விளையாட்டு அரங்கம்” அருகே உள்ள, திருநெல்வேலி “மாநகர காவல் ஆணையர்” அலுவலகத்தில், “மக்கள் குறை தீர்க்கும் நாள்” கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில், மொத்தம் 9 நபர்கள் கலந்து கொணடு, தங்களது…

Read More