Headlines
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் கல்விக் கடன் முகாமில் கலந்து உரையாற்றினார் :

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் கல்விக் கடன் முகாமில் கலந்து உரையாற்றினார் :

செப் 10, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா அவர்கள் இன்று (10.09.2025) கோணம் அரசு பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற மாபெரும் கல்விக் கடன் முகாமில் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களிடம் உரையாற்றினார். இம்முகாமில் வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கல்விக் கடன் பெறும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பல்வேறு துறை அதிகாரிகள், வங்கி மேலாளர்கள், பேராசிரியர்கள் மற்றும்…

Read More
உங்களுடன் ஸ்டாலின் முகாம்சுமை தீருந்தபுரம் பஞ்சாயத்தில் துவக்கி வைப்பு :

உங்களுடன் ஸ்டாலின் முகாம்சுமை தீருந்தபுரம் பஞ்சாயத்தில் துவக்கி வைப்பு :

தென்காசி செப்டம்பர் 10- தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் சுமை தீர்ந்தபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகம் சுமை தீர்ந்தபுரம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சுமை தீர்ந்த புரம் பஞ்சாயத்து தலைவர் குட்டி என்ற அருணாச்சலம் தலைமை தாங்கினார் தென்காசி ஒன்றிய கவுன்சிலர் செல்வ விநாயகம் மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன் கோமதிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் ஒன்றியத்தில் பொதுமக்கள் சாலை மறியல் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் ஒன்றியத்தில் பொதுமக்கள் சாலை மறியல் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மூன்றாவது வார்டு ல்150.க் மேற்பட்டோர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தாத காரணத்தினால் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர் ஒரு குடும்பத்தில் நான்கு நபர் இருந்தாலும் ஒருவருக்கு மட்டும் தான் இத்திட்டத்தின் கீழ் வேலை செய்யலாம் அந்த ஒரு நபர் கூட 100 நாள் திட்டத்தின் கீழ் வேலை பொதுமக்கள் வங்கிக் கணக்கில் பணம் ஏறவில்லை என்று இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read More
பொங்கலுக்கு இலவச வேஷ்டி–சேலை தயாரிப்பு வேகமாக தொடக்கம் :

பொங்கலுக்கு இலவச வேஷ்டி–சேலை தயாரிப்பு வேகமாக தொடக்கம் :

செப் 10 கன்னியாகுமரி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேஷ்டி மற்றும் சேலை வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் தமிழகத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு பயனளிப்பதோடு, கைத்தறி நெசவாளர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள பெரிய அரசுங்கன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு வேஷ்டிகள் நெய்யப்பட்டு வருகின்றன. கைத்தறி தொழிலாளர்கள் பல வாரங்களாக உழைத்து வந்த நிலையில்,…

Read More
கற்கள் வைத்து சாலை மறைப்பு – பொதுமக்கள் அவதி !

கற்கள் வைத்து சாலை மறைப்பு – பொதுமக்கள் அவதி !

9 செப்டம்பர் 2025 குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் செந்தூரன் நகர் பகுதியில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கியச் சாலையில் காங்கிரீட் செப்பனிடும் பணிக்காக கற்கள் வைத்து சாலை மறிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்விக் கூடம் மற்றும் மருத்துவமனை அமைந்துள்ள அச்சாலை, பொதுமக்கள் தினசரி அதிகம் பயன்படுத்தும் முக்கியப் பாதையாகக் கருதப்படுகிறது. ஆனால் கற்கள் வைத்து வழி மறைத்ததால், பொதுமக்கள், மாணவர்கள், நோயாளிகள் செல்லும் வாகனங்கள் கூட இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள்…

Read More
ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறப்பு

ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறப்பு.

செப் 9 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில உணவு ஆணையத் தலைவர் மற்றும் கழகத் தணிக்கைக்குழு உறுப்பினர், முன்னாள் அமைச்சர் திரு. என். சுரேஷ்ராஜன் அவர்கள் வழங்கிய கோரிக்கை மனுவின் அடிப்படையில், உடனடி தீர்வு காண மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு மா. சுப்பிரமணியன் அவர்கள் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் மாவட்ட…

Read More
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு

இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு.

இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி அவர்களுடன் வாக்கு செலுத்தும் வரிசையில் நின்றிருந்தபோது உடன் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் , (கோவை ), ஈஸ்வர சாமி (பொள்ளாச்சி), பிரகாஷ் (ஈரோடு ), அருள்நேரு (பெரம்பலூர்), அண்ணாதுரை (திருவண்ணாமலை ), வெங்கடேசன் (மதுரை ), மற்றும் இந்திய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் : ஏழுமலை

Read More
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.

கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் பங்கேற்றனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் லா ஏழுமலை

Read More
கன்னியாகுமரி கண்ணாடிக் கூண்டு பாலம் – அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் ஆய்வு

கன்னியாகுமரி கண்ணாடிக் கூண்டு பாலம் – அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் ஆய்வு.

செப் 9 கன்னியாகுமரி கண்ணாடி கீறல் சம்பவம் – அரசுக்கு கண்டனம் கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டு பாலத்தில் கண்ணாடி கீறல் ஏற்பட்டதை தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏ திரு. எண். தளவாய் சுந்தரம் அவர்கள் அரசின் அலட்சியத்தை கண்டித்து, பொதுமக்களுக்கு ஏற்பட்ட அச்சத்தை போக்க தவறியதற்காக கடும் கண்டனம் தெரிவித்தார். நேரில் ஆய்வு மேற்கொண்ட தளவாய் சுந்தரம் பராமரிப்பு பணிகளின் போது சுத்தியல் விழுந்து கண்ணாடி சேதமடைந்ததை அடுத்து, தளவாய் சுந்தரம் அவர்கள் கழக…

Read More
மகளிர் தொண்டரணி பொறுப்பாளர்கள் சந்திப்பு :

மகளிர் தொண்டரணி பொறுப்பாளர்கள் சந்திப்பு :

கோவை வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளராக புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட சுமதி ரமேஷ் , மாநில மகளிர் தொண்டரணி துணைசெயலாளர், நா.மாலதி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடன் கழகத்தின் மூத்த நிர்வாகியும் மகளிரணியின் மாவட்ட துணை அமைப்பாளருமாகிய பார்வதி, கோவை வடக்கு மாவட்டதுணைசெயலாளர் ஜெயந்தி, மகளிரணி மகளிர் தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் நாகரத்தினம், ஜெனிபர்,மற்றும், நீதிமணி ஆகியோர் உடன் இருந்தனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More