Headlines
நடிகர் ரோபோ சங்கர் காலமானார் !

நடிகர் ரோபோ சங்கர் காலமானார் !

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்(46) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னையில், நேற்று ஷூட்டிங்கின்போது மயங்கி விழுந்த அவர் தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. இவர், விஸ்வாசம், மாரி, வேலைக்காரன், புலி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Read More
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் வருவாய் துறை இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைந்நலூரில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் வட்டாட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக அரசை மும் வருவாய்த்துறை மற்றும் வட்டாட்சியர் அவர்களையும் கண்டித்து காரப்பட்டு கிராமத்தில் செஞ்ச ப்பா செம கோட்டையான் வாய்க்கால் மூலம் சொம கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் ஏரிக்கு பல ஆண்டுகளாக தண்ணீர் சென்று கொண்டிருந்தது அந்த இடத்தை பல நபர்கள் செய்து வருகிறார். மற்றும் காரப்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிடர் புதுமனை பகுதியில் அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா…

Read More
தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை கோயில் கிரிவலப் பாதை அடிக்கல் நாட்டு விழா !சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை கோயில் கிரிவலப் பாதை அடிக்கல் நாட்டு விழா !சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி செப்டம்பர் 16 – தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பண்பொழியில் அமைந்துள்ள அருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோயிலின் கிரிவலப் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் ஆகும் இந்த மலைக்குன்றின் மீது அமர்ந்திருக்கும் கோயிலின் மூலவராக குமாரசாமி உள்ளார் இங்கு குமாரசாமி தீர்த்தம் பூஞ்சனை தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளது. இந்த மலைக்கு திரு என்று அழைக்கும் புகழ்பெற்ற மழையாகும் திருமலை…

Read More
கருங்கல் அருகே 42 நாட்கள் ஆன பெண் குழந்தையை கொன்ற தாய் கைது :

கருங்கல் அருகே 42 நாட்கள் ஆன பெண் குழந்தையை கொன்ற தாய் கைது :

செப் 12, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த பெனிட்டா ஜெயஅன்னாள் (20), மதுரையைச் சேர்ந்த கார்த்திக் (21) இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு 43 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில், குழந்தையின் வாயில் டிஸ்யூ பேப்பர் திணிக்கப்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது….

Read More
கோவை மண்டல அறிவியல் மையம் ஆய்வு !

கோவை மண்டல அறிவியல் மையம் ஆய்வு !

கோவை கொடிசியா மைதானம் அருகே அமையப்பெற்ற கோவை மண்டல அறிவியல் மையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பணிகள் செய்யப்பட உள்ளது இதனை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.பவன்குமார் மற்றும் கா.கிரியபனவர். மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன் அவர்களுடன் மண்டல அறிவியல் மையத்தை ஆய்வு செய்தனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் : லா.ஏழுமலை

Read More
கன்னியாகுமரி மாவட்டம் பூவன்கோடு – வக்ஃப் நிலம் அபகரிப்பு கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் !

கன்னியாகுமரி மாவட்டம் பூவன்கோடு – வக்ஃப் நிலம் அபகரிப்பு கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் !

செப் 10 கன்னியாகுமரி – இன்று காலை குமரி மாவட்டம் பூவன்கோடு சந்திப்பில், வக்ஃப் சொத்தை போலி பத்திரம் மூலம் அபகரித்த புரோக்கர் ஷேக் முகமது மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பத்திர பதிவு அலுவலகர் கௌரிசங்கர் ஆகியோரை கண்டித்து மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்திற்கு சொந்தமான பூவங்கோடு பகுதியில் உள்ள 4.55 ஏக்கர் வக்ஃப் நிலம் (சர்வே எண் 171/4), லேண்ட் மாஃபியா கும்பல் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டது உறுதி…

Read More
சின்னத்திரை நடிகர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது :

சின்னத்திரை நடிகர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது :

கலையுலக முன்னணியினர் மற்றும் பல்துறை பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்றது சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் (2025-2028) அறிமுக விழா சென்னை மதுரவாயிலில் உள்ள பாக்கியலட்சுமி கல்யாண மண்டபத்தில் இன்று (செப்டம்பர் 7) நடைபெற்றது. கலையுலக முன்னணியினர் மற்றும் பல்துறை பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரத்,செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நவிந்தர், பொருளாளரக தேர்ந்தெடுக்கப்பட்ட கற்பகவல்லி மற்றும் இதர நிர்வாகிகளான வசந்த், சிவக்கவிதா, ஆதித்யா, தேவானந்த்,…

Read More
பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார் !

பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார் !

அவர் எழுதிய புத்தகம் கடந்த வாரம் வெளியான நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். பூவை செங்குட்டுவன் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் அஞ்சலி.! தமிழ் இலக்கிய மற்றும் திரையுலகினரால் பெரிதும் மதிக்கப்படும் கவிஞரும் பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் செப்டம்பர் 5 மாலை காலமானார். அவருக்கு வயது 90. அவரது இறுதி சடங்குகள் சனிக்கிழமை அன்று நடைபெற்ற நிலையில், பூவை செங்குட்டுவனின் இல்லத்திற்கு சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,…

Read More
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் திமுக சார்பில் உறுதிமொழி கூட்டம்…

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் திமுக சார்பில் உறுதிமொழி கூட்டம்…

செப்டம்பர் 20 மாவட்ட வாரியாக ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டங்கள் நடத்த திமுக தலைவர் மு‌.க‌.ஸ்டாலின் உத்தரவு! திமுகழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று (09-09-2025) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. அதில், திமுகழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: கடந்த பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில்,படுபாதாளத்துக்குப் போன தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீட்டெடுத்து, 11.19 விழுக்காட்டு வளர்ச்சியோடு, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக நம் திராவிட மாடல் ஆட்சியில் உயர்த்தியிருக்கிறோம். இதன் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு…

Read More
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்கிட ஆராய குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்கிட ஆராய குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !

திருப்பூர் : செப்டம்பர்.10 அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆராய குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 1962 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் தொடங்கப்பட்டது. இந்த ஆலை தினசரி 1,250 மேற்பட்ட டன் மற்றும் ஆண்டுக்கு சுமார் 2.14 லட்சம் மெட்ரிக் டன் அரவை செய்யும் திறனுடன் தொடங்கப்பட்டது. இந்த ஆளை வளாகத்தில் தினசரி 55 ஆயிரம் லிட்டர்…

Read More