திருநெல்வேலியில் இம்மாதம் 21-ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 45,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியும், புதிய பேருந்துகளை இயக்கி வைத்தும் பேசுகிறார்! நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு, நெல்லையில் பேட்டி!
திருநெல்வேலி,டிச.16:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருநெல்வேலயில் பங்கேற்கும் விழாக்கள் நடைபெறும் இடங்களை, சபாநாயகர் மு. அப்பாவு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, பாளையங்கோட்டைஃதொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், மாநகராட்சி மேயர் கோ. ராம கிருஷ்ணன் ஆகியோர், இன்று (டிச.16) காலையில், நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். அதன பின்னர், அமைச்சர் நேரு, செய்தியாளரகளிடம்…
