Headlines
மநீம மகளிர் அணி சார்பில் ஆதரவு அற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது

மநீம மகளிர் அணி சார்பில் ஆதரவு அற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் எம் பி பதவி ஏற்பதை முன்னிட்டு ஆதரவு அற்ற குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது. திருமதி பத்மாவதி ரவிச்சந்திரன் மாநில மகளிர் அணி செயலாளர் மதுரை மற்றும் நெல்லை மண்டலம், அவர்களின் தலைமையில் பாண்டிசெல்வி,மணிமேகலை, ராம்நாடுஉமா, உமையாள், சங்கீதா, சமேஸ்வரி, லீலா சாரதி, சிலம்பு, ஜோதி மணி, மீனாம்பிகா, ஜெயலட்சுமி, நிரோஷ் பானு, ராஜலட்சுமி, பூமாராணி, சுகுணா தேவி, மற்றும் பலர் கலந்து கொண்டு பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் எம் பி…

Read More
அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரிப்பு 8-வது நாளாக குளிக்க தடை விதிப்பு

அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரிப்பு 8-வது நாளாக குளிக்க தடை விதிப்பு.

தென்காசி ஜூலை 26- தென்காசி மாவட்டம் குற்றாலம் எழில் மிகு நீர் அருவிகளின் நகரமாகும் இங்கு பிரதான அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவி புலி அருவி தேனருவி ஆகிய அருவிகள் உள்ளன இவற்றில் தேனருவி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் இங்கு குளிக்க அனுமதியில்லை இதே நிலையில் தற்போது குற்றாலம் சீசன் களைகட்டிய நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்குள்ள அருவிகளை நோக்கி படையெடுப்பது வாடிக்கையாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும்…

Read More
வாணியம்பாடி அருகே வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க தந்தை போக்சோ சட்டத்தில் கைது.

வாணியம்பாடி அருகே வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க தந்தை போக்சோ சட்டத்தில் கைது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி மூர்த்தி (வயது 55).இவருக்கு திருமணம் ஆகி நீண்ட நாட்களாகியும் குழந்தை இல்லைத நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டதால், அதன் பின்னர் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்துள்ளார்.தற்போது13 வயதான சிறுமி அதே கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மூர்த்தி தன்னுடைய வளர்ப்பு மகள் என்றும் பாராமல் சிறுமிக்கு…

Read More
தென்காசி மேற்கு ஒன்றிய திமுக அலுவலகம் திறப்பு விழா.

தென்காசி மேற்கு ஒன்றிய திமுக அலுவலகம் திறப்பு விழா.

தென்காசி ஜூலை 26- தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பிரானூர் பார்டரில் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக அலுவலகம் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி தலைமையில் தென்காசி ஒன்றிய குழு பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் ரஹீம் மாவட்ட பொருளாளர் எம் எம் ஷெரீப் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி பேரூர் கழகச் செயலாளர் ராஜராஜன் ஆகியோர்…

Read More
வாணியம்பாடி அருகே மின்சார மின்மாற்றியை கழற்றி சுமார் 3 லட்சம் மதிப்பிலான காபார்களை திருடி சென்ற மர்ம கும்பல்.

வாணியம்பாடி அருகே மின்சார மின்மாற்றியை கழற்றி சுமார் 3 லட்சம் மதிப்பிலான காபார்களை திருடி சென்ற மர்ம கும்பல்.

15 மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம்யின்றி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அவதி. வாணியம்பாடி,ஜூலை.24- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரம் கிராமத்தில் உள்ள பெரியகொல்லி வட்டம்பகுதியில் வழக்கறிஞர் ஏ.சி. தேவகுமார், அருள், சக்கரவர்த்தி, ஞானசேகர், சுந்தரம் ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலங்களுக்கு மின்சாரம் செல்ல அங்கு மின் மாற்றி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த மின் மாற்றியில் சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் செல்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் மின்சாரம் தடை…

Read More
மதுரை ஆதீனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

மதுரை ஆதீனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் முன் ஜாமினை ரத்து செய்ய கோரி காவல்துறை தாக்கல் செய்த மனு மீது மதுரை ஆதீனம் ஜூலை 30ம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்தும்போது அவரது ஆதரவாளர்கள் இடையூறு செய்ததாக காவல்துறை புகார். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
மக்கள் நீதி மய்யம்தின் நம்மவர் தொழிற் சங்கம் பேரவையின் மாநில ஒருக்கிணைபாளர் R. சொக்கர் பிறந்த நாள் விழா

மக்கள் நீதி மய்யம்தின் நம்மவர் தொழிற் சங்கம் பேரவையின் மாநில ஒருக்கிணைபாளர் R. சொக்கர் பிறந்த நாள் விழா.

நம்மவர் தொழிற்சங்கம் பேரவையின் ஒருகிணைப்பாளரும், சமூக சேவகருமான R. சொக்கரின் பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளார் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி.

Read More
ஆம்பூர் அருகே கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட இருளர் குடும்பத்தை சேர்ந்த 7 மீட்பு. வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜித்தா பேகம் நடவடிக்கை.

ஆம்பூர் அருகே கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட இருளர் குடும்பத்தை சேர்ந்த 7 மீட்பு. வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜித்தா பேகம் நடவடிக்கை.

வாணியம்பாடி,ஜூலை.24- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாய்க்கனேரி ஊராட்சி காமனூர்தட்டு மலை கிராமத்தில் ராஜா என்பவருக்கு சொந்தமான நிலத்தை மகாவிஷ்ணு என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரிடம் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் கிராமத்தை சேர்ந்த இருளர் குடும்பத்தினர் 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக அந்த குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 7 பேரை மகாவிஷ்ணு தனது நிலத்தில் விவசாய மற்றும் கால்நடை பராமரிப்பு பணி செய்ய அழைத்து சென்று…

Read More
அதிகரட்டி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

அதிகரட்டி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

அதிகரட்டி பகுதியில் அமைந்துள்ளது அதிகரட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இரா. தயாளன் தலைமை வகித்தார். இதில் மூன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய்- 45,00,000/-ம் கடனுதவி நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்களால் வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில் மகளிர் அனைவரும் சிறு, குறு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று கூட்டு வட்டி எனும் கொடுமையில்…

Read More
ஆம்பூர் அருகே வீட்டுமனைகள் பிரிவு அமைக்க அங்கீகாரம் பெற ரூபாய் 12 லட்சம் லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் கையும் களவுமாக கைது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை.

ஆம்பூர் அருகே வீட்டுமனைகள் பிரிவு அமைக்க அங்கீகாரம் பெற ரூபாய் 12 லட்சம் லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் கையும் களவுமாக கைது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை.

வாணியம்பாடி,ஜூலை.23- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஏ.கே.சீனிவாசன். இவர் ஆம்பூர் அடுத்த மேல் சாணாங்குப்பம் ஊராட்சிக்கு பின்புறம் அமைந்துள்ள 7 ஏக்கர் நிலத்தில் வீட்டு மனைகள் அமைப்பதற்காக ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமாரை அணுகிய போது அவர் வீட்டுமனைகள் பிரிவு அமைக்க அங்கீகாரம் பெறுவதற்காக 12 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு சீனிவாசன் கடந்த ஓராண்டில் மொத்தம் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் 2 லட்சம் பணம் கேட்டு…

Read More