அரசியல்
“புரட்சி பாரதம்” கட்சியின் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் விழா…
விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த புரட்சி பாரதம் கட்சி மாவட்ட நிர்வாகிகள் புரட்சி பாரதம் கட்சி பொதுச்செயலாளராக ருசேந்திரகுமாரை அறிவித்த கட்சியின் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் விழா விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டச் செயலாளர்கள் தெற்கு தமிழரசன், வடக்கு கஜேந்திரன், தென்மேற்கு திருநாவுக்கரசு, தென்கிழக்கு தியாகராஜன் தலைமை தாங்கினர். கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்கள் வடக்கு கோவிந்தன், கிழக்கு ஏழுமலை, தெற்கு ராஜா அன்பரசு, கடலூர் மாவட்டச்செயலாளர்கள் கிழக்கு சங்கரலிங்கம், வடக்கு விக்கிதுரை, மாநகர் முகேஷ் மூர்த்தி முன்னிலையில்…
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில்.. மானியம் வழங்கும் திட்டம்..
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் ஆட்டோ வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ராஜலட்சுமி என்பவருக்கு ஆட்டோ வாகனத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தொழிலாளர் நலத்துறை இயக்குநர் எஸ்.ஏ.இராமன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று வழங்கினார். உடன் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ், தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) மீனாட்சி உட்பட பலர் உள்ளனர்.
பசுவதைத் தடைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த பெருந்தலைவர் மீது தாக்குதல் – இன்று கருப்பு தினமாக நினைவு..
நாகர்கோவில், நவம்பர் 7: தமிழக மக்கள் “பெருந்தலைவர்” என போற்றும் காமராஜர் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காலத்தில், பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்த்ததற்காக 1966ம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி டெல்லியில் ஆர்எஸ்எஸ் மற்றும் அப்போது பாரதிய ஜனசங்கம் (இன்றைய பாஜக) இணைந்து அவரது இல்லத்தை தீவைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. அந்த கொடூர நிகழ்வை நினைவுகூரும் வகையில் இன்று நவம்பர் 7 “கருப்பு தினம்” எனக் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாகர்கோவில் காமராஜர்…
மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். கமல்ஹாசன் பிறந்த நாள் விழா..
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தீடிர்நகர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். கமல்ஹாசனின் 71 பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தப் பிறந்த நாள் விழா மக்கள் நீதி மையத்தின் மாநில தொழிற்சங்கத்தின் மாநில ஒருக்கினைப்பாளரும், மக்களின் நாயகன் சொக்கர் தலைமையில் கொண்டாடப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு அப்பகுதி உள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகளை மாவட்ட நிர்வாகிகள்…
திருநெல்வேலியில் நடைபெற்ற, நான்கு மாவட்டங்கள் அளவிலான வணிகவரித்துறை அலுவலர்களின், பணி திறனாய்வுக் கூட்டம்! தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு!
திருநெல்வேலி,நவ.6:- நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று (நவம்பர். 6) காலையில் 2025-26 நிதியாண்டிற்கான, சென்ற மாதம் (அக்டோபர்) வரையிலான, திருநெல்வேலி கோட்ட அளவிலான, வணிகவரித்துறை அலுவலர்களின், பணித்திறனாய்வு கூட்டம், தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்தறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில், வணிகவரித்துறை ஆணையர் எஸ். நாகராஜன் முன்னிலையில், நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது :- “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பு ஏற்றது முதல், வணிகவரித்துறையின் சேவைகள், அனைவருக்கும் எளிதாக கிடைத்திடும்…
விவசாயிகள் மகாசபை காத்திருப்பு போராட்டம்..!
உடுமலைநவம்பர் 06. உடுமலை அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு நடந்தது. தாலுகா செயலாளர் கல்லாபுரம் அருணாச்சலம் தலைமை வகித்தார். செல்வராஜ், சுந்தரராஜ். ராஜசேகர், ஜெயக்குமார், கருப்புசாமி, சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மடத்துக்குளம் தாலுகா கல்லாபுரம் முதல் கடத்தூர் வரையில் உள்ள விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். விவசாயிகளின் நிலங்களை மிரட்டி பறிக்கும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட சார் பதிவாளரை…
திருநெல்வேலி வள்ளியூரில், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய, சபாநாயகர் அப்பாவு!
திருநெல்வேலி,நவ.5:- நெல்லை மாவட்டத்தில், பாளையங்கோட்டை, நாங்குநேரி,வள்ளியூர், ராதாபுரம், களக்காடு, சேரன்மகாதேவி ஆகிய, ஆறு ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த, 831 ஊரக குடியிருப்புகளுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிடும் பொருட்டு, 605 கோடி ரூபாய் மதிப்பில், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள், தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகினறன. இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து, இன்று (நவம்பர்.5) காலையில், வள்ளியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர்.இரா. சுகுமார் தலைமையில், “தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர்” (சபாநாயகர்) மு.அப்பாவு,…
அரிப்பு தெருவில் S.I.R கணக்கெடுப்பு பணி தீவிரம் ஜமாஅத் தலைவருக்கு படிவம் வழங்கிய ரிஸ்வானா ஹிதாயத்…
நாகர்கோவில், நவ. 05: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 39வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத் அவர்கள், S.I.R கணக்கெடுப்பு படிவத்தை கோட்டார் அரிப்பு தெரு ஜமாஅத் தலைவர் சுகர்னோ அவர்களுக்கு வழங்கினார். வீடு வீடாக கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் போது ஹிதாயத், தீபா உள்ளிட்டோர் மற்றும் 39வது வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன்: ஜெனீருடன்குமரி மாவட்ட நிருபர்: பாவலர் ரியாஸ்.
பொள்ளாச்சியில்: “உங்களுடன் ஸ்டாலின் முகாம்”..
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொள்ளாச்சி அடுத்து சின்னம்பாளையம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு சேவைகள் பட்டா மாறுதல், மின்சார இணைப்பு, மற்றும் ஆதார் திருத்தல், சேவைகளை நேரடியாக மக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை மாவட்ட செயலாளர் இல.பத்மநாதன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். மேலும் கமலக்கண்ணன் தெற்கு மத்திய ஒன்றிய செயலாளர்,சந்திரசேகர் தெற்கு மத்திய துணை ஒன்றிய செயலாளர், கானியப்பன் வடக்கு ஒன்றிய செயலாளர், KS தனசேகர் தலைமை செய்குழு…
திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, வாராந்திர, மக்கள் குறை தீர்க்கும் மனுநாள் முகாம்! மேயர் ராம கிருஷ்ணன் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை, நேரடியாக பெற்றார்!
திருநெல்வேலி,நவ.4:-திருநெல்வேலி மாநகராட்சி, மைய அலுவலக கூட்ட அரங்கில், இன்று (நவம்பர்.4) வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றுக் கொண்டார். “பெறப்பட்ட மனுக்கள், முறையாக பரிசீலிக்கப்பட்டு, அவற்றின் மீது உரிய நடடிவக்கைகள் எடுக்கப்படும்!”- என, மனுதாரர்களிடம் மேயர் “உறுதி” அளித்தார். அதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம், மனுக்களை பரிசீலிக்குமாறு, அறிவுறுத்தினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் எம்.புரந்திரதாஸ்…
