அரசியல்
திருநெல்வேலி வள்ளியூரில், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய, சபாநாயகர் அப்பாவு!
திருநெல்வேலி,நவ.5:- நெல்லை மாவட்டத்தில், பாளையங்கோட்டை, நாங்குநேரி,வள்ளியூர், ராதாபுரம், களக்காடு, சேரன்மகாதேவி ஆகிய, ஆறு ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த, 831 ஊரக குடியிருப்புகளுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிடும் பொருட்டு, 605 கோடி ரூபாய் மதிப்பில், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள், தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகினறன. இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து, இன்று (நவம்பர்.5) காலையில், வள்ளியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர்.இரா. சுகுமார் தலைமையில், “தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர்” (சபாநாயகர்) மு.அப்பாவு,…
அரிப்பு தெருவில் S.I.R கணக்கெடுப்பு பணி தீவிரம் ஜமாஅத் தலைவருக்கு படிவம் வழங்கிய ரிஸ்வானா ஹிதாயத்…
நாகர்கோவில், நவ. 05: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 39வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத் அவர்கள், S.I.R கணக்கெடுப்பு படிவத்தை கோட்டார் அரிப்பு தெரு ஜமாஅத் தலைவர் சுகர்னோ அவர்களுக்கு வழங்கினார். வீடு வீடாக கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் போது ஹிதாயத், தீபா உள்ளிட்டோர் மற்றும் 39வது வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன்: ஜெனீருடன்குமரி மாவட்ட நிருபர்: பாவலர் ரியாஸ்.
பொள்ளாச்சியில்: “உங்களுடன் ஸ்டாலின் முகாம்”..
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொள்ளாச்சி அடுத்து சின்னம்பாளையம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு சேவைகள் பட்டா மாறுதல், மின்சார இணைப்பு, மற்றும் ஆதார் திருத்தல், சேவைகளை நேரடியாக மக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை மாவட்ட செயலாளர் இல.பத்மநாதன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். மேலும் கமலக்கண்ணன் தெற்கு மத்திய ஒன்றிய செயலாளர்,சந்திரசேகர் தெற்கு மத்திய துணை ஒன்றிய செயலாளர், கானியப்பன் வடக்கு ஒன்றிய செயலாளர், KS தனசேகர் தலைமை செய்குழு…
திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, வாராந்திர, மக்கள் குறை தீர்க்கும் மனுநாள் முகாம்! மேயர் ராம கிருஷ்ணன் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை, நேரடியாக பெற்றார்!
திருநெல்வேலி,நவ.4:-திருநெல்வேலி மாநகராட்சி, மைய அலுவலக கூட்ட அரங்கில், இன்று (நவம்பர்.4) வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றுக் கொண்டார். “பெறப்பட்ட மனுக்கள், முறையாக பரிசீலிக்கப்பட்டு, அவற்றின் மீது உரிய நடடிவக்கைகள் எடுக்கப்படும்!”- என, மனுதாரர்களிடம் மேயர் “உறுதி” அளித்தார். அதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம், மனுக்களை பரிசீலிக்குமாறு, அறிவுறுத்தினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் எம்.புரந்திரதாஸ்…
நெல்லை மாநகராட்சி வர்த்தக மைய கூட்ட அரங்கில் நடைபெற்ற, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியின், அனைத்துக்கட்சி நிலை முகவர்களுக்கான, ஆலோசனை கூட்டம்! மாவட்ட மற்றும் தொகுதி தேர்தல் அலுவலர்கள் பங்கேற்பு!
திருநெல்வேலி,நவ.3:-பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரும், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளருமான டாக்டர். மோனிகா ராணா தலைமையில், இன்று ( நவம்பர்.3) மாலையில், நெல்லை டவுண் மாநகராட்சி, வர்த்தக மைய கூட்ட அரஙகில் வைத்து, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு (வரிசை எண்.270) ஆன, வாக்காளர் பட்டியலில், சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, வாக்குச்சாவடிகளின் அங்கீகரிக்கப்பட்ட, அனைத்துக்கட்சி நிலை முகவர்களுடன் ஆன, “ஆலோசனை கூட்டம்” நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான டாக்டர்…
காயிதே மில்லத் அவதூறு:வி.ஹெச்.பி, பாஜகவினர் மீது நடவடிக்கை கோரி மஜக மனு!
நாகர்கோவில், நவம்பர் 3: கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு, அனைத்து சமூக மக்களாலும் போற்றப்படும் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் வி.ஹெச்.பி மாநில நிர்வாகி காளியப்பன் மற்றும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட மஜக (மனிதநேய ஜனநாயக கட்சி) சார்பில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. வி.ஹெச்.பி மற்றும்…
உடுமலையில் கார்த்திகை தீப திருவிழாவிற்கு விளக்குகள் உற்பத்தி தீவிரம்.!
உடுமலை, நவம்பர் 03: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பள்ள பாளையத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக மண் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மண்பாண்டங்கள் பயன்படுத்தும் ஆர்வம் தற்போது பொது களிடம் பொதுமக்களிடம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தீப ஒளி திருநாளாம், திருக்கார்த்திகை தீபம் வரும், 13 ம் தேதி கொண்டாடப்படுகிறது. வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், கோவில் மற்றும் தெருக்கள் என நல்லெண்ணெய் விளக்குகள் வைத்து பாரம்பரியமாக வழிபட்டு வருகின்றனர். திருக்கார்த்திகைக்குத்…
திருநெல்வேலி மாவட்டத்தில், 190 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்படும்! தற்போது இம்மாவட்டத்தில், மொத்தம் 14,18,325 வாக்காளர்கள் உள்ளனர்! செய்தியாளர்கள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சுகுமார் தகவல்!
திருநெல்வேலி,நவ.3:- வாக்காளர் பட்டியலில், சிறப்பு தீவிர திருத்தம் (SPECIAL INTENSIVE REVIEW – SIR) தொடர்பான பணிகள், நவம்பர்.4-ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் (டிசம்பர்.4) முடிய நடைபெற உள்ள சூழ்நிலையில், இன்று (நவம்பர்.3) காலையில், நெல்லை “கொக்கிரகுளம்” பகுதியில் அமைந்துள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்ட அரங்கில், செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது, அவர் கூறிதாவது:- “திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக பகுதியில் நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும், மாநகர பகுதியில்…
நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்…
நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவை தலைவர் போஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக பொறுப்பாளர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக் , தேர்தல் பணி செயலாளர், அரசு கொறடா மாண்புமிகு கா.ராமசந்திரன், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் பரமேஸ்குமார், தென்றல் செல்வராஜ், திராவிடமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் SIR வாக்காளர் சிறப்பு தீவிர வாக்காளர்…
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுமா? நெல்லையில் சபாநாயகர் அப்பாவு அதிரடி பேட்டி!
திருநெல்வேலி,நவ.1:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பொட்டல் என்னும் இடத்தில், இன்று (நவம்பர். 1) காலையில், அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு.அப்பாவு, சாதாரண முறையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:- “அதிமுகவிலிருந்து சட்ட மன்ற உறுப்பினர் செங்கோட்டையன் நீக்கம் செயயப்பட்டது தொடர்பாக, எந்தக்கடிதமும் இதுவரையிலும் சட்டப்பேரவைக்கு தரப்படவில்லை. அவ்வாறு கடிதம் கொடுக்கும் பட்சத்தில், அது குறித்து பரிசீலனை செய்யப்படும். அதிமுக அளிக்கும் ஆவணங்களின் அடிப்படையில், உரிய…
