அரசியல்
நீலகிரி மாவட்ட திமுக தோழமை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு.!
நீலகிரி மாவட்டத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிள் கூட்டம் மாவட்ட கழக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக், கழக தேர்தல் பணி செயலாளர் – அரசு தலைமை கொறடா மாண்புமிகு கா.ராமசந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், சி.பி.ஐ மாவட்ட செயலாளர் போஜராஜ், சி.பி.எம் செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம், முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர்…
திருநெல்வேலி மேலப்பாளையத்தில், மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்த, “நலம் காக்கும் ஸ்டாலின்!” திட்ட, சிறப்பு மருத்துவ முகாம்! நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, பயன் பெற்றனர்!
திருநெல்வேலி,நவ.8:- முதலமைச்சர் முக ஸ்டாலின், இந்த ஆண்டு (2026) ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி, சென்னை மயிலாப்பூரில், அறிமுகம் செய்த “நலம் காக்கும் ஸடாலின்!” திட்ட சிறப்பு மருத்துவ முகாம், ஒவ்வொரு சனிக்கிழமையும், காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரையிலும், நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், சனிக்கிழமையாகிய இன்று (நவம்பர்.8),நெல்லை மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் உள்ள, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில்”நலம் காக்கும் ஸடாலின்!” திட்ட சிறப்பு மருத்துவ முகாம், நடைபெற்றது….
உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடும் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில், நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சுகுமார்! ஒரே நேரத்தில், மொத்தம் 2 லட்சம் மீன் விரலிகளை, இருப்பு செய்திட இலக்கு!
திருநெல்வேலி,நவ.8:- தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின், திருநெல்வேலி மாவட்ட அலுவலகம்,ஒன்றிய அரசின் “பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா” ( PRADHAN MANTRI MATSYA SAMPADA YOJANA- PMMSY) ஆகியவற்றின் சார்பாக, நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில், நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், இன்று (நவம்பர். 8) காலையில், குறுக்குத்துறை முருகன் கோயில் படித்துறையில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி…
மணக்குடி இணைப்பு பாலம் அகற்றும் பணி தொடக்கம்..பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின் முயற்சியில் தொடங்கிய பணி..
மணக்குடி; 07 கன்னியாகுமரி மாவட்டம் மேலமணக்குடி மற்றும் கீழமணக்குடி கடற்கரை கிராமங்களை இணைக்கும் பாலம் கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமியினால் கடுமையாக சேதமடைந்தது. அதன் பின்னர் பலமுறை பழுதுபார்க்கப்பட்டாலும், கடந்த எட்டு ஆண்டுகளாக முழுமையாக பயன்பாட்டுக்கு அமையாமல், உடையும் நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையிலே, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்து, பழுதடைந்த பாலத்தை அகற்ற கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, குமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த்…
“புரட்சி பாரதம்” கட்சியின் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் விழா…
விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த புரட்சி பாரதம் கட்சி மாவட்ட நிர்வாகிகள் புரட்சி பாரதம் கட்சி பொதுச்செயலாளராக ருசேந்திரகுமாரை அறிவித்த கட்சியின் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் விழா விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டச் செயலாளர்கள் தெற்கு தமிழரசன், வடக்கு கஜேந்திரன், தென்மேற்கு திருநாவுக்கரசு, தென்கிழக்கு தியாகராஜன் தலைமை தாங்கினர். கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்கள் வடக்கு கோவிந்தன், கிழக்கு ஏழுமலை, தெற்கு ராஜா அன்பரசு, கடலூர் மாவட்டச்செயலாளர்கள் கிழக்கு சங்கரலிங்கம், வடக்கு விக்கிதுரை, மாநகர் முகேஷ் மூர்த்தி முன்னிலையில்…
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில்.. மானியம் வழங்கும் திட்டம்..
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் ஆட்டோ வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ராஜலட்சுமி என்பவருக்கு ஆட்டோ வாகனத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தொழிலாளர் நலத்துறை இயக்குநர் எஸ்.ஏ.இராமன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று வழங்கினார். உடன் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ், தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) மீனாட்சி உட்பட பலர் உள்ளனர்.
பசுவதைத் தடைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த பெருந்தலைவர் மீது தாக்குதல் – இன்று கருப்பு தினமாக நினைவு..
நாகர்கோவில், நவம்பர் 7: தமிழக மக்கள் “பெருந்தலைவர்” என போற்றும் காமராஜர் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காலத்தில், பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்த்ததற்காக 1966ம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி டெல்லியில் ஆர்எஸ்எஸ் மற்றும் அப்போது பாரதிய ஜனசங்கம் (இன்றைய பாஜக) இணைந்து அவரது இல்லத்தை தீவைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. அந்த கொடூர நிகழ்வை நினைவுகூரும் வகையில் இன்று நவம்பர் 7 “கருப்பு தினம்” எனக் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாகர்கோவில் காமராஜர்…
மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். கமல்ஹாசன் பிறந்த நாள் விழா..
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தீடிர்நகர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். கமல்ஹாசனின் 71 பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தப் பிறந்த நாள் விழா மக்கள் நீதி மையத்தின் மாநில தொழிற்சங்கத்தின் மாநில ஒருக்கினைப்பாளரும், மக்களின் நாயகன் சொக்கர் தலைமையில் கொண்டாடப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு அப்பகுதி உள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகளை மாவட்ட நிர்வாகிகள்…
திருநெல்வேலியில் நடைபெற்ற, நான்கு மாவட்டங்கள் அளவிலான வணிகவரித்துறை அலுவலர்களின், பணி திறனாய்வுக் கூட்டம்! தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு!
திருநெல்வேலி,நவ.6:- நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று (நவம்பர். 6) காலையில் 2025-26 நிதியாண்டிற்கான, சென்ற மாதம் (அக்டோபர்) வரையிலான, திருநெல்வேலி கோட்ட அளவிலான, வணிகவரித்துறை அலுவலர்களின், பணித்திறனாய்வு கூட்டம், தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்தறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில், வணிகவரித்துறை ஆணையர் எஸ். நாகராஜன் முன்னிலையில், நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது :- “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பு ஏற்றது முதல், வணிகவரித்துறையின் சேவைகள், அனைவருக்கும் எளிதாக கிடைத்திடும்…
விவசாயிகள் மகாசபை காத்திருப்பு போராட்டம்..!
உடுமலைநவம்பர் 06. உடுமலை அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு நடந்தது. தாலுகா செயலாளர் கல்லாபுரம் அருணாச்சலம் தலைமை வகித்தார். செல்வராஜ், சுந்தரராஜ். ராஜசேகர், ஜெயக்குமார், கருப்புசாமி, சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மடத்துக்குளம் தாலுகா கல்லாபுரம் முதல் கடத்தூர் வரையில் உள்ள விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். விவசாயிகளின் நிலங்களை மிரட்டி பறிக்கும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட சார் பதிவாளரை…
