அரசியல்
நீலகிரி மாவட்ட திமுக சார்பில் துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா.!
நீலகிரி, நவம்பர் : 27 திமுக இளைஞர் அணி செயலாளர் – மாண்புமிகு துணை முதல்வர்,உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் தலைமையேற்று மாவட்ட கழக அலுவலக முகப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி 2026 சட்டமன்ற தேர்தலில் நீலகிரி மாவட்டத்திலுள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மீண்டும்…
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் கணியூர் பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்கள் பதவி ஏற்பு.
உடுமலை, நவம்பர் : 27. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்(தேர்தல்) துறை தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி 2023 ன் படி மடத்துக்குளம்,கணியூர் பேரூராட்சிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. நிகழ்வுகளில் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயராமகிருஷ்ணன் கலந்து கொண்டார்.மடத்துக்குளம் பேரூராட்சி நியமன உறுப்பினராக மகாலட்சுமி பதவியேற்றுக் கொண்டார்.பேரூராட்சித் தலைவர் கலைவாணி பாலமுரளி,செயல் அலுவலர் ஆகியோர் நியமன ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதுபோல கணியூர் பேரூராட்சியில் நியமன உறுப்பினராக…
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம் திமுக சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
விழுப்புரம் : நவம்பர்,26. தமிழ்நாடு துணை முதலமைச்சர், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம், கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாபெரும் இரத்ததான முகாமை விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா.இலட்சுமணன் அவர்கள் இரத்த தானம் வழங்கி, முகாமை துவக்கி வைத்தார். உடன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் செ.புஷ்பராஜ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள்…
திருநெல்வேலியில், இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான தினம் உறுதிமொழி எடுத்துக் கொண்ட அரசு அதிகாரிகள்! மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்பு!
திருநெல்வேலி,நவ.26:- பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரஙகம் அருகேயுள்ள, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில்,”இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான தினம்” உறுதிமொழி,இன்று (நவம்பர்.26) காலையில். ஏற்றுக்கொள்ளப்பட்டது. “இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டின் இறையாண்மையும்- சமநலச் சமுதாயமும், சமய சார்பின்மையும், மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக, இந்திய திருநாட்டை நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய பொருளியல், அரசியல் நீதி எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு…
சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் சபரிமலை அன்னதான ஆரம்ப விழா முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் துவக்கி வைத்தார்…
சுசீந்திரம்; நவ.22:- அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் சபரிமலை விழாக்கால அன்னதான ஆரம்ப விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திரு. என். தளவாய்சுந்தரம் அன்னதானத்தை துவக்கி வைத்தார். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த அன்னதானம், இவ்வருடம் நவம்பர் 21 முதல் ஜனவரி 15 வரை—தினமும் நடைபெற உள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி வழங்கி வருவது பாராட்டத்தக்க தொண்டாக இருப்பதாக அவர் தெரிவித்தார்….
திருநெல்வேலி மாவட்ட கடலோர கிராமங்களின், மீனவ சங்கத்தினருக்கு 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான, டிராக்டர்கள் வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!
திருநெல்வேலி,நவ.22:- நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், இன்று (நவம்பர்.22) காலையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சி ஒன்றில், இம்மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களான, ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், விஜயாபதி ஊராட்சி “தோமையர் புரம்” மீனவ சங்கத்தினருக்கும், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், செட்டிகுளம் ஊராட்சி, “பெருமணல்” மீனவ சங்கத்தினருக்கும், தலா 14 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 டிராக்டர்களை, திருநெல்வேலி “நாடாளுமன்ற உறுப்பினர்” வழக்கறிஞர் செ. ராபர்ட் புரூஸ் முன்னிலையில், “மாவட்ட ஆட்சித்தலைவர்”…
மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் சிட்டிங் கைபந்து போட்டி – நாகர்கோவில் கோணத்தில் விழாக்கோலத்தில் துவக்கம்..
நாகர்கோவில்:குமரி பாராலிம்பிக் எம்பவர்மென்ட் சார்பில் மாநில அளவிலான சிட்டிங் கைபந்து போட்டி நாகர்கோவில் கோணம் பகுதியில் இன்று சிறப்பாக நடைபெற்றது. மொத்தம் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் கோவை, கன்னியாகுமரி, இராமநாதபுரம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்டவை—இந்தப் போட்டியில் பங்கேற்றன. விஜய் வசந்த் எம்.பி போட்டியை துவக்கி வைத்தார்.., குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி இந்த போட்டியை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அவர் போட்டியாளர்கள்…
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அகஸ்தியர்பட்டியில், “நலம் காக்கும் ஸ்டாலின்”சிறப்பு மருத்துவ முகாம்! நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு, பயன் பெற்றனர்!
திருநெல்வேலி,நவ.22:- தமிழ்நாடு “முதலமைச்சர்” முக ஸ்டாலின், சென்னை மயிலாப்பூரில் இந்த ஆண்டு {2025} ஆகஸ்ட் மாதம், 2- ஆம் தேதி துவக்கி வைத்த, “நலம் காக்கும் ஸ்டாலின்!” “சிறப்பு மருத்துவ முகாம்” ஒவ்வொரு சனிக்கிழமையும், அந்தந்த மாவட்டங்களில், நடைபெற்று வருகிறது. அதன்படி, திருநெல்வேலி புறநகர் வட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள, “அகஸ்தியர்பட்டி” தனியார் பள்ளி வளாகத்தில், இன்று { நவம்பர்.22} இந்த முகாம் நடைபெற்றது. இதில், அடிப்படை மருத்துவ பரிசோதனைகள், உயர்நிலை மருத்துவ பரிசோதனைகளான உயர் ரத்த அழுத்தம்,…
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில், 19 கோடி ரூபாய் மதிப்பிலான, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைத்த சபாநாயகர் அப்பாவு! நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பங்கேற்பு!
திருநெல்வேலி,நவ.22:- தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, நேற்று {நவம்பர்.21} காலையில், தன்னுடைய சொந்த தொகுதியான, திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில், “கூட்டப்புளி” மீனவக் கிராமத்தில், 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பிலான, “கடல் பொருட்கள் மதிப்புக்கூட்டு மையம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம்” அமைக்கும் பணி,”கூத்தன்குழி” மீனவக்கிராமத்தில், 2 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான “மீன் இறங்கு தளம்” அமைக்கும் பணி, “விஜயாபதி” மீனவக் கிராமத்தில், 14 கோடியே…
திருநெல்வேலியில் நடைபெற்ற 72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின் மாநில அளவிலான நிறைவு நிகழ்ச்சி! கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் பங்கேற்று 12 ஆயிரம் பேருக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!
திருநெல்வேலி,நவ.20:- மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், இம்மாதம் {நவம்பர்} 14- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த, 72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின் நிறைவு நிகழ்ச்சி, இன்று (நவம்பர். 20) காலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை, நேருஜி சிறுவர் கலையரங்கில் நடைபெற்றது. சபாநாயகர் மு. அப்பாவு தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க. நந்த குமார், கூடுதல் பதிவாளர் மு. வீரப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்…
