அரசியல்
கன்னியாகுமரி மாவட்டம் பூவன்கோடு – வக்ஃப் நிலம் அபகரிப்பு கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் !
செப் 10 கன்னியாகுமரி – இன்று காலை குமரி மாவட்டம் பூவன்கோடு சந்திப்பில், வக்ஃப் சொத்தை போலி பத்திரம் மூலம் அபகரித்த புரோக்கர் ஷேக் முகமது மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பத்திர பதிவு அலுவலகர் கௌரிசங்கர் ஆகியோரை கண்டித்து மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்திற்கு சொந்தமான பூவங்கோடு பகுதியில் உள்ள 4.55 ஏக்கர் வக்ஃப் நிலம் (சர்வே எண் 171/4), லேண்ட் மாஃபியா கும்பல் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டது உறுதி…
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு.
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி அவர்களுடன் வாக்கு செலுத்தும் வரிசையில் நின்றிருந்தபோது உடன் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் , (கோவை ), ஈஸ்வர சாமி (பொள்ளாச்சி), பிரகாஷ் (ஈரோடு ), அருள்நேரு (பெரம்பலூர்), அண்ணாதுரை (திருவண்ணாமலை ), வெங்கடேசன் (மதுரை ), மற்றும் இந்திய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் : ஏழுமலை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.
கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் பங்கேற்றனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் லா ஏழுமலை
கன்னியாகுமரி கண்ணாடிக் கூண்டு பாலம் – அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் ஆய்வு.
செப் 9 கன்னியாகுமரி கண்ணாடி கீறல் சம்பவம் – அரசுக்கு கண்டனம் கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டு பாலத்தில் கண்ணாடி கீறல் ஏற்பட்டதை தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏ திரு. எண். தளவாய் சுந்தரம் அவர்கள் அரசின் அலட்சியத்தை கண்டித்து, பொதுமக்களுக்கு ஏற்பட்ட அச்சத்தை போக்க தவறியதற்காக கடும் கண்டனம் தெரிவித்தார். நேரில் ஆய்வு மேற்கொண்ட தளவாய் சுந்தரம் பராமரிப்பு பணிகளின் போது சுத்தியல் விழுந்து கண்ணாடி சேதமடைந்ததை அடுத்து, தளவாய் சுந்தரம் அவர்கள் கழக…
மகளிர் தொண்டரணி பொறுப்பாளர்கள் சந்திப்பு :
கோவை வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளராக புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட சுமதி ரமேஷ் , மாநில மகளிர் தொண்டரணி துணைசெயலாளர், நா.மாலதி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடன் கழகத்தின் மூத்த நிர்வாகியும் மகளிரணியின் மாவட்ட துணை அமைப்பாளருமாகிய பார்வதி, கோவை வடக்கு மாவட்டதுணைசெயலாளர் ஜெயந்தி, மகளிரணி மகளிர் தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் நாகரத்தினம், ஜெனிபர்,மற்றும், நீதிமணி ஆகியோர் உடன் இருந்தனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் சுகாதார அவலம் !
நாகர்கோவில் : 09-09-2025 நாகர்கோவில் மாநகராட்சி அண்ணா பேருந்து நிலையம் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்டு, தொற்றுநோய் பரவும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. சுகாதார அதிகாரிகள் மெளனம் பேருந்து நிலையத்தில் குப்பை, கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் நிலையில், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ஆனால், சுகாதார அதிகாரிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காக்கின்றனர் என பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர். “இந்த அவலநிலையை கருத்தில் கொண்டு நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?”…
நீலகிரி மாவட்டத்தின் கட்டிடங்கள் கட்டுமான வரைவிதிகளுக்காக மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார் அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் :
நீலகிரி மாவட்டத்தில் 1993 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி காலத்தில் முதன்மை திட்டத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட கட்டிடங்கள் கட்டுமான வரை விதி சட்டத்தின் மூலமாக நீலகிரி மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் கட்டிடங்களுக்கு அனுமதி பெற மிகக் கடினமான விதிமுறைகள் இருந்ததின் காரணமாக மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அனுமதி பெறாமல் பொதுமக்கள் கஷ்டப்படுகின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாண்புமிகு திராவிட மாடல் ஆட்சிநாயகர் தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்களின்…
விடியல் ஆட்சியில் வக்புச் சொத்து திருட்டு பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்தின் கீழ் வரும் சுமார் 45 கோடி மதிப்பிலான வக்புச் சொத்து, ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு லஞ்சம் பெற்று போலி பத்திரம் செய்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கையில், வேர்க்கிளம்பி பூவாங்கோடு பத்திர பதிவாளர் கௌரிசங்கர் தொடர்புடையவர் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, அவர்மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்து போலி பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் பெரிய அளவிலான போராட்டம்…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆசிரியர்களை சந்தித்து உரையாடிய எம்.எல்.ஏ.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ குவைத் நாட்டில் நந்தவனம் அமைப்பு சார்பில் நடத்தப்படும் தமிழ் வகுப்பில் பயிலும் குழந்தைகளையும், ஆசிரியர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்தார். கடல் கடந்து தமிழ் வளர்க்கும் அவர்களின் தமிழ் தொண்டினை பாராட்டியதோடு, அவர்களின் முயற்சிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி என்றும் துணை நிற்கும் என்று உறுதி அளித்தார். பண்ருட்டி செய்தியாளர்R. விக்னேஷ்
தென்காசியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படும் நகர் மன்ற தலைவர் சாதிரையும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் :
தென்காசி :செப்-07 தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலமான து 400 ஆண்டுகளுக்கு மேல் அனைத்து மதத்தினருக்கும் அருள்பாலித்து புதுமைகள் பல புரிந்து கொண்டிருக்கும் ஆலயம் ஆனது தென்காசி திருநெல்வேலி செல்லும் சாலை தினசரி மார்க்கெட் அருகில் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட் கட்டிடம் ஆனது கடந்தாண்டு இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுமான நடைபெற்று வந்த நிலையில் இதற்கான வாயில்கள் ஆலயத்தின் எதிர்புறம் பெரிய அளவில் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆலய நிர்வாகம் சென்னை…
