அரசியல்
கோவை மாமன்ற உறுப்பினர் தமிழக முதல்வருடன் ஜெர்மனியில் சந்திப்பு.
தமிழின காவலர் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் TRB.ராஜா கோவைஆகியோரை மாநகராட்சி 33 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஜெர்மனியில் குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத் குமார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில் உங்களுடன் “ஸ்டாலின் முகாம்” நடைபெற்றது :
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் KP மஹாலில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாத் அவர்கள். உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அவர்கள். ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன்.ஊராட்சி மன்ற தலைவர் உமா நடராஜன். மற்றும் கட்சி நிர்வாகிகள்.அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு முகாமினை சிறப்பாக செய்தனர். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB. குருசாமி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பண்ருட்டி தி.மு.க கவுன்சிலர் :
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் நிலையம் கு நேற்று புதிதாக நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அவர்ககளை நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி வா உ சி தெரு கவுன்சிலர் கலைவாணி மதியழகன் அவர்கள். பண்ருட்டி வா உ சி தெரு தி மு க கவுன்சிலர் கலைவாணி மதியழகன் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அவர்களுக்கு சால்வை அணிந்து மரியாதை செலுத்தினர். பண்ருட்டி செய்தியாளர் :R. விக்னேஷ்
3 – வது முறையாக தமிழக அரசின் சா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் :
நீலகிரி மாவட்டம் உதகை பெத்லகேம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று 30/08/25 பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தமிழக அரசின் சா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்3 வது முறையாக நடைபெற்றது. முகாமில் ECG, Ultra Sound, X Ray, Echo, Cbc, Urea Creatine, cholesterol இரத்த பரிசோதனை, ஆகிய பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்பட்டது, இந்த முகாம் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.சோமசுந்தரம் தலைமையில் நடைெற்றது. இம்முகாமில், வட்டார மருத்துவ அலுவலர்…
ஓரணியில் தமிழ்நாடு !
கோவை : கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பில், கோவை மாநகர் மாவட்டம் 80வது வார்டு கெம்பட்டி பகுதியில் 50 சதவீதம் இலக்கை எட்டியதையொட்டி, பகுதி செயலாளர் என்.ஜே. முருகேசன் வார்டு செயலாளர் நா.தங்கவேல் தலைமையில், பொது சுகாதாரக் குழு தலைவர், 25 பாக கண்காணிப்பாளர், வர்த்தக அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் முன்னிலையில், செட்டி வீதியில் உள்ள “கொங்கு மஹாலில்” BLA2, BDA, BLC, I.T….
கோவை மாநகராட்சி சுகாதாரக் குழு கூட்டம் !
பொது சுகாதார குழு தலைவர்.பெ.மாரிசெல்வன் தலைமையில், 28-08-2025 மதியம் 12 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள சுகாதார குழு தலைவர் அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், மாநகர் நல உதவி அலுவலர் மரு.பூபதி, கால்நடை மருத்துவர் சரவணன், மத்திய மண்டலம் சுகாதார அலுவலர் குணசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் சம்பத், அஸ்ஸலாம் பாஷா, வசந்தா மணி, கமலாவதிபோஸ், சுமித்ரா, அம்சவேணி, மற்றும் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
இளைஞர் அணி அமைப்பாளர் தேர்வு பணி :
நேற்று, 26/8/25 காலை 11 மணி.ஈரோடு மத்திய மாவட்டம். பெருந்துறை சட்டமன்ற தொகுதி. ஊத்துக்குளி தெற்கு ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி பேருர் கழகம் ,மொரட்டுப்பாளையம் ஆகியவற்றிலுள்ள அனைத்து கிளைகழகங்களுக்கு ஆன இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிப்பதற்கான படிவங்களை வழங்கினேன். உடன் ஒன்றிய செயலாளர் திரு.ஈஸ்வர மூர்த்தி.பேருர் கழக செயலாளர் திரு.மூர்த்தி ஆகியோர்.மற்றும் பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள். மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள். மேற்கு மண்டல பொறுப்பாளர் தேர்தல் சிங்கம் திரு.செந்தில் பாலாஜி அவர்களின்…
விழுப்புரம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் !
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர்..திரு.ஷே.ஷேக்.அப்துல் ரஹமான் தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் காங்கிரஸ் தலைவர்செல்வபெருந்தகை தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் : அந்தோணிசாமி
பழனி வட்டம், அமரபூண்டி ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பெற்றுக்கொண்டார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், அமரபூண்டி ஊராட்சியில் இன்று(21.08.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இம்முகாமில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்….
தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர் உயிரிழப்பு.
சென்னையை சேர்ந்த பிரபாகரன் (வயது 33) மாநாட்டிருக்கு செல்வதற்கு முன்பாக மயக்கமடைந்து உயிரிழந்தார். நேற்று இரவு சென்னையில் இருந்து நண்பர்களுடன் வேனில் புறப்பட்ட பிரபாகரன் சற்று முன்னதாக மதுரை சக்கிமங்கலம் அருகே வேனை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றார். சிறுநீர் கழிக்க சென்ற பிரபாகரனை காணவில்லை என நண்பர்கள் தேடிச்சென்ற பொழுது பிரபாகரன் மயக்க நிலையில் காணப்பட்டார். இதனை அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் பிரபாகரன் அனுமதிக்கப்பட்ட போது அவர்…
