Headlines

திருநெல்வேலி செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் – எவர்கிரீன் ரோட்டரி சங்கம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருநெல்வேலி செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் – எவர்கிரீன் ரோட்டரி சங்கம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், எவர்கிரீன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பசுமை பள்ளி திட்டம் கீழ் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி எவர்கிரீன் சங்கத்தின் தலைவர் ரொட்டேரியன் திருமதி சுபா செந்தில் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரொட்டேரியன் திரு செந்தில் அவர்கள் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும், சங்கத்தின் செயலாளர் ரொட்டேரியன் அன்டின் விஜிலா மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பேசில் காகரின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதன் ஒரு பகுதியாக, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கொய்யா மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, அவற்றின் பயன், இயற்கை வள பாதுகாப்பு மற்றும் மர வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.

எவர்கிரீன் ரோட்டரி சங்கம் மாநகரத்தில் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி சமூக சேவையில் முன்னிலை வகித்து வருகிறது.

தமிழக விடியல் குமரி மாவட்ட தலைமை நிருபர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *