திருநெல்வேலியில், கப்பலோட்டிய தமிழர் வ. உ. சி.89-வது ஆண்டு நினைவு தினம்! மாவட்ட ஆட்சியர் தலைமையில், வ. உ. சி. திருவுருவச்சிலைக்கு, மாலை அணிவித்து செய்த சபாநாயகர்!
திருநெல்வேலி,நவ.19:- சுதந்திர போராட்ட வீரரும், ஆங்கிலேயரை எதிர்த்து கப்பலோட்டிய தமிழருமான வ. உ. சிதம்பரனாரின், 89- வது ஆண்டு “நினைவு” தினம் நேற்று (நவம்பர். 18) கடை பிடிக்கப்பட்டது. இந்நாளையொட்டி, நெல்லை மாநகராட்சி எதிரே அமைந்துள்ள வ. உ. சி. மணிமண்டபத்தில் உள்ள,வ.உ.சி.யின் திருவுருவச்சிலைக்கு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். இரா. சுகுமார் தலைமையில், நேற்று (நவம்பர்.18) காலையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் {சபாநாயகர்} மு. அப்பாவு, “மலர் மாலை”அணிவித்து, மரியாதை செலுத்தினார். அவருடன், தமிழக…
