பெரியகாடு மீனவர்களின் சிறப்பு பிரார்த்தனை.. உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கடல் அன்னைக்கு மலர் தூவி வழிபாடு…
கன்னியாகுமரி மாவட்டம் பெரியகாடு கிராமத்தில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவர்கள் இன்று அதிகாலை சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். கடலில் இறங்கும் முன் தங்களின் படகுகளை அர்ச்சித்து, கடல் அன்னைக்கு மலர் தூவி வழிபாடு நடத்தினர். கடல் பாதுகாப்பிற்கான மரபு வழி பிரார்த்தனையில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர். ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமாகும் மீனவர்களை மீட்க தனிச்சிறப்பான ஹெலிகாப்டர் மீட்பு தளம், கடல் ஆம்புலன்ஸ் சேவை ஆகியவற்றை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மீனவர்கள்…
