கட்டுமானப் பணி சுணக்கம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு!
பத்துகாணி,ஜனவரி 30: கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் இயங்கி வந்த பழைய மருத்துவமனைக் கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, அதனை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், இந்தப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அழுத்தம் கொடுக்கும் காலங்களில் மட்டும் பணிகள்…
