கருங்கல் அருகே 42 நாட்கள் ஆன பெண் குழந்தையை கொன்ற தாய் கைது :
செப் 12, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த பெனிட்டா ஜெயஅன்னாள் (20), மதுரையைச் சேர்ந்த கார்த்திக் (21) இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு 43 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில், குழந்தையின் வாயில் டிஸ்யூ பேப்பர் திணிக்கப்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது….
