நாகர்கோவிலில் வணிக வளாக உரிமையாளர்களுடன் காவல் துறையின் சிறப்பு கலந்துரையாடல்.
செப் 23 கன்னியாகுமரி நாகர்கோவில் மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலன் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு. லலித் குமார்., இ.கா.ப தலைமையில், வணிக வளாக உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சிறப்பு கலந்துரையாடல் இன்று மாலை நாகர்கோவில் உட்கோட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வணிக வளாகங்களுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை வளாகம் முன்பாகவே சாலையில் நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து தடைகள்…
