கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகம் இருள் சூழ்ந்ததால் பொதுமக்கள் கவலை !
செப் 16, கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகம் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகளையும், மீனவ சமுதாய மக்களையும் ஈர்த்துவரும் முக்கிய இடமாக விளங்குகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் பெருமளவில் வருகை தருகின்றனர். ஆனால், இங்கு இரவு நேரங்களில் துறைமுக வளாகத்தில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் இருப்பதால் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள், பாதுகாப்பின்மை காரணமாக அச்சத்துடன் வருகை தரும் நிலை உருவாகியுள்ளது. “இரவு…
