திருநெல்வேலியில் கோலாகலமாக நடைபெற்ற, “தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்” எம்.ஜி.ஆர். 109- வது பிறந்த தினவிழா!திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கிய, அதிமுக நிர்வாகிகள்!
திருநெல்வேலி,ஜன.17:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், தலைவருமான, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 109- வது ஆண்டு பிறந்த தினவிழா, இன்று {ஜனவரி.17} தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான “எடப்பாடி” கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க, திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக, திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் நிறுவப்பட்டுள்ள, எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு, மாவட்ட செயலாளர் “தச்சை” என். கணேச ராஜா தலைமையில், “மலர் மாலை”…
