Headlines
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்கிட ஆராய குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்கிட ஆராய குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !

திருப்பூர் : செப்டம்பர்.10 அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆராய குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 1962 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் தொடங்கப்பட்டது. இந்த ஆலை தினசரி 1,250 மேற்பட்ட டன் மற்றும் ஆண்டுக்கு சுமார் 2.14 லட்சம் மெட்ரிக் டன் அரவை செய்யும் திறனுடன் தொடங்கப்பட்டது. இந்த ஆளை வளாகத்தில் தினசரி 55 ஆயிரம் லிட்டர்…

Read More
கொடைக்கானல் சுற்றுலா வந்த கேரளா பயணிகள் 5 பேரை ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் அறையில் அடைத்து வைத்து அடித்ததாக சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு .!

கொடைக்கானல் சுற்றுலா வந்த கேரளா பயணிகள் 5 பேரை ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் அறையில் அடைத்து வைத்து அடித்ததாக சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு .!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியிலிருந்து 5 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து மேல்மலை கிராமமான போலூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தங்கும் விடுதி தேடியதாக கூறப்படுகிறது. கேரளா சுற்றுலா பயணிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள வருவாய் நிலத்திற்கு சென்று புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ஆனைமலை புலிகள் வனப்பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதியில் பணியாற்றும் வனத்துறையினர் 2 பேர் நீங்கள் வனப்பகுதிக்குள் சென்று உள்ளீர்கள் எனவே 25 ஆயிரம் அபராதம் பிடிக்கப்படும் என்று சுற்றுலா…

Read More
நாகர்கோவில் வடசேரி அரசு தொடக்கப்பள்ளி அருகே சாக்கடை சீர்கேடு – பொதுமக்கள் கவலை !

நாகர்கோவில் வடசேரி அரசு தொடக்கப்பள்ளி அருகே சாக்கடை சீர்கேடு – பொதுமக்கள் கவலை !

செப் 10, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி அரசு தொடக்கப்பள்ளி முன்பு கழிவுநீர் செல்லும் சாக்கடை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் பள்ளியில் படிக்கும் சிறார்களும், அப்பகுதி பொதுமக்களும் நோய்தொற்று ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார சீர்கேட்டை கருத்தில் கொண்டு, மாநகராட்சி உடனடியாக சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.

Read More
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் கல்விக் கடன் முகாமில் கலந்து உரையாற்றினார் :

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் கல்விக் கடன் முகாமில் கலந்து உரையாற்றினார் :

செப் 10, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா அவர்கள் இன்று (10.09.2025) கோணம் அரசு பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற மாபெரும் கல்விக் கடன் முகாமில் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களிடம் உரையாற்றினார். இம்முகாமில் வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கல்விக் கடன் பெறும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பல்வேறு துறை அதிகாரிகள், வங்கி மேலாளர்கள், பேராசிரியர்கள் மற்றும்…

Read More
உங்களுடன் ஸ்டாலின் முகாம்சுமை தீருந்தபுரம் பஞ்சாயத்தில் துவக்கி வைப்பு :

உங்களுடன் ஸ்டாலின் முகாம்சுமை தீருந்தபுரம் பஞ்சாயத்தில் துவக்கி வைப்பு :

தென்காசி செப்டம்பர் 10- தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் சுமை தீர்ந்தபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகம் சுமை தீர்ந்தபுரம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சுமை தீர்ந்த புரம் பஞ்சாயத்து தலைவர் குட்டி என்ற அருணாச்சலம் தலைமை தாங்கினார் தென்காசி ஒன்றிய கவுன்சிலர் செல்வ விநாயகம் மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன் கோமதிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் ஒன்றியத்தில் பொதுமக்கள் சாலை மறியல் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் ஒன்றியத்தில் பொதுமக்கள் சாலை மறியல் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மூன்றாவது வார்டு ல்150.க் மேற்பட்டோர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தாத காரணத்தினால் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர் ஒரு குடும்பத்தில் நான்கு நபர் இருந்தாலும் ஒருவருக்கு மட்டும் தான் இத்திட்டத்தின் கீழ் வேலை செய்யலாம் அந்த ஒரு நபர் கூட 100 நாள் திட்டத்தின் கீழ் வேலை பொதுமக்கள் வங்கிக் கணக்கில் பணம் ஏறவில்லை என்று இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read More
பொங்கலுக்கு இலவச வேஷ்டி–சேலை தயாரிப்பு வேகமாக தொடக்கம் :

பொங்கலுக்கு இலவச வேஷ்டி–சேலை தயாரிப்பு வேகமாக தொடக்கம் :

செப் 10 கன்னியாகுமரி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேஷ்டி மற்றும் சேலை வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் தமிழகத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு பயனளிப்பதோடு, கைத்தறி நெசவாளர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள பெரிய அரசுங்கன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு வேஷ்டிகள் நெய்யப்பட்டு வருகின்றன. கைத்தறி தொழிலாளர்கள் பல வாரங்களாக உழைத்து வந்த நிலையில்,…

Read More
மகளிர் தொண்டரணி பொறுப்பாளர்கள் சந்திப்பு :

மகளிர் தொண்டரணி பொறுப்பாளர்கள் சந்திப்பு :

கோவை வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளராக புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட சுமதி ரமேஷ் , மாநில மகளிர் தொண்டரணி துணைசெயலாளர், நா.மாலதி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடன் கழகத்தின் மூத்த நிர்வாகியும் மகளிரணியின் மாவட்ட துணை அமைப்பாளருமாகிய பார்வதி, கோவை வடக்கு மாவட்டதுணைசெயலாளர் ஜெயந்தி, மகளிரணி மகளிர் தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் நாகரத்தினம், ஜெனிபர்,மற்றும், நீதிமணி ஆகியோர் உடன் இருந்தனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோயில் குளம் சுத்திகரிப்பு பணிகள் தொடக்கம் :

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோயில் குளம் சுத்திகரிப்பு பணிகள் தொடக்கம் :

செப் 9, கன்னியாகுமரி : சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் குளத்தில் தேங்கிய சேறு, கழிவுகள் அகற்றப்படுகின்றன. மீன்பிடிப்பு உரிமை ஏலம் : குளத்தின் மீன்பிடிக்கும் உரிமை ஏலம் விடப்பட்டதால், ஒப்பந்ததாரர்கள் மீன்பிடிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சுத்திகரிப்பால் கிடைக்கும் பலன் : பணிகள் முடிந்ததும் நீர்த் தேக்கம் மேம்பட்டு, பக்தர்களும் உள்ளூர் மக்களும் பலனடைவார்கள் என எதிர்பார்ப்பு. கன்னியாகுமரி நகர நிருபர் : செய்லிஸ்

Read More
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் சுகாதார அவலம் !

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் சுகாதார அவலம் !

நாகர்கோவில் : 09-09-2025 நாகர்கோவில் மாநகராட்சி அண்ணா பேருந்து நிலையம் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்டு, தொற்றுநோய் பரவும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. சுகாதார அதிகாரிகள் மெளனம் பேருந்து நிலையத்தில் குப்பை, கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் நிலையில், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ஆனால், சுகாதார அதிகாரிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காக்கின்றனர் என பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர். “இந்த அவலநிலையை கருத்தில் கொண்டு நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?”…

Read More