திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், சரியாக செயல்படவில்லை! “புரட்சி பாரதம்” கட்சி குற்றச்சாட்டு!
திருநெல்வேலி,நவ.15:-“புரட்சி பாரதம்” கட்சியின், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஏ.கே.நெல்சன், இன்று [நவ.15] திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியிலுள்ள, நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை, சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- “திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், சரியாக செயல்படவில்லை. பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில், இந்த நிர்வாகம் அடிப்படை வசதிகள் எதனையும் செய்து தரவில்லை. இது குறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், ஆய்வு மேற்கொள்ள வேண்டும்! நஞ்சை நிலங்களில், வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ள, சேரன்மகாதேவி பேரூராட்சி செயல் அலுவலர்…
