திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட, காங்கிரஸ் தலைமையிடத்தில் விருப்பமனு கொடுத்த, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்!
திருநெல்வேலி,டிச.13:- அடுத்த ஆண்டு( 2026) துவக்கத்தில் நடைபெறவுள்ள, சடடமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக, விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகினறன. அதன் அடிப்படையில், இன்று (டிசம்பர்.13) காலையில், சென்னை தேனாம்பேட்டை, காங்கிரஸ் மைதானத்தில் உள்ள, தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான “சத்தியமூர்த்தி பவன்” அலுவலகத்தில், 2026- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை, திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. சங்கரபாண்டியன், தமிழ்நாடு…
