கோட்டார் இளங்கடை ஈத்கா மைதானத்தில் சிறுவர் பூங்கா – மேயர் ரெ.மகேஷ் திறப்பு.
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோட்டார் இளங்கடை முஸ்லீம் சமுதாய ஈத்கா மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவின் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. குழந்தைகளுக்கான புதிய விளையாட்டு உலகம் நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான திரு. ரெ.மகேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் விழாவில் அவர் உரையாற்றுகையில், “இப்பூங்கா அப்பகுதி சிறுவர்களின் விளையாட்டுத் திறனை வளர்க்கவும், மனமகிழ்ச்சியுடன் நேரத்தை கழிக்கவும் பெரிதும்…
