கோவை மத்தியசிறையில் செக்கிழுத்தசெம்மல் வ.வு.சிதம்பரனாருக்கு மரியாதை :
இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைக்கு எதிராக விடுதலை கனலை மூட்டியவர் . தொழிலாளர்களின் உரிமைகளுக்காக சங்கம் அமைத்து போராடியவர், செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள செக்கிற்கு நேற்று (05-09-2025) தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கோவை மாவட்டக் குழுவின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கோவை மாவட்டச் செயலாளர் ப.பா. ரமணி, முன்னாள் மாமன்ற உறுப்பினர்…
