திருநெல்வேலி மாவட்டத்தில், தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தின் கீழ்,1 லட்சத்து 33 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில், மொத்தம் 964 முகாம்களில், சொட்டு மருந்து வழங்கப்பட்டன!
திருநெல்வேலி,அக்.12:- திருநெல்வேலி மாவட்டத்தில், தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தின் கீழ்,1 லட்சத்து 33 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில், மொத்தம் 964 முகாம்களில், சொட்டு மருந்து வழங்கப்பட்டன! பாளையங் கோட்டையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர், இந்த முகாமினை, துவக்கி வைத்தனர். தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் இந்தியாவில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக, நம்நாட்டில் கடந்த 14 ஆண்டுகளாக, போலியோ நோயின்…
