Headlines
ஆற்றில் பாய்ந்த மினி டெம்போ – பொதுமக்கள் ஆச்சரியம் !

ஆற்றில் பாய்ந்த மினி டெம்போ – பொதுமக்கள் ஆச்சரியம் !

ஆக் 29, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்தி மங்கலம் பகுதியில் ஆற்றில் பாய்ந்த மினி டெம்போ, நீரில் மிதந்து கொண்டிருக்கும் காட்சியை பார்த்த பொதுமக்கள் பெரும் ஆச்சரியத்தில் திரண்டனர். திடீரென ஆற்றுக்குள் சென்ற மினி டெம்போ, நீரில் நீச்சல் அடிப்பது போல் மிதந்து செல்ல, அப்பகுதியை கடந்து சென்ற மக்கள் ஆர்ப்பரித்து பார்த்தனர். இதனால் அந்த பகுதி சிறிய பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர்…

Read More
அழகப்பபுரத்தில் ஆட்டோ-பைக் விபத்து : செல்பி முயற்சியால் சோகம் !

அழகப்பபுரத்தில் ஆட்டோ-பைக் விபத்து : செல்பி முயற்சியால் சோகம் !

ஆக் 29, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பகுதியில் நேற்று சோகமான விபத்து ஏற்பட்டது. ஒரே பைக்கில் மூன்று பெண்கள் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது, செல்பி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில், எதிரே வந்த ஆட்டோ மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், மூவரும் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், இரு பெண்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவரின் நிலை உயிருக்கு ஆபத்தானதாக இருந்து தீவிர சிகிச்சை…

Read More
முன்னாள் எம்.பி. ஹச்.வசந்தகுமார் 5 - ஆம் ஆண்டு நினைவு தினம் !

முன்னாள் எம்.பி. ஹச்.வசந்தகுமார் 5 – ஆம் ஆண்டு நினைவு தினம் !

ஆக் 28, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள மணிமண்டப சமாதியில், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வசந்த் & கோ நிறுவனருமான ஹச்.வசந்தகுமார் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், அவரது மகனும் கன்னியாகுமரி தொகுதி எம்.பியுமான விஜய்வசந்த், தாயாருடன் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். குமரி தாலுக்கா செய்தியாளர் : செலிஸ்

Read More
குளச்சலில் தண்ணீர் வாளியில் விழுந்த 1½ வயது குழந்தை பலி !

குளச்சலில் தண்ணீர் வாளியில் விழுந்த 1½ வயது குழந்தை பலி !

ஆக் 28, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் லியோன் நகரைச் சேர்ந்த ஆரோக்கிய ஜெனோ என்பவரின் ஒன்றரை வயது மகள் ரியானா, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென தண்ணீர் வாளியில் தலைகீழாக விழுந்தார். இதனால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தார். தாயார் டயானா உடனே குழந்தையை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்து குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read More
டெம்போ மீது பைக் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழப்பு !

டெம்போ மீது பைக் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழப்பு !

ஆக் 28, கன்னியாகுமரி : குமரி மாவட்டம், நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியை சேர்ந்த சுனில் ராஜ்குமார் (45) என்பவர் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். கடந்த 18ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டெம்போ மோதியதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த அவர் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று (புதன்கிழமை) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், நித்திரவிளை போலீசார் வழக்கு…

Read More
பத்மநாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலம் :

பத்மநாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலம் :

ஆக் 27, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியது. வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வழக்கம்போல் பண்டிகை தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன் அத்தம் நட்சத்திரத்தன்று விழா நடைபெறும் மரபின்படி, இன்று அரண்மனையில் அத்தப்பூ கோலம் போடப்பட்டது. இவ்விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பாரம்பரிய முறையில் ஓணம் கொண்டாட்டத்தை துவக்கினர். குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி முதல்வருக்கு “சிறந்த முதல்வர்” விருது !

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி முதல்வருக்கு “சிறந்த முதல்வர்” விருது !

கன்னியாகுமரி, ஆகஸ்ட் 18: அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியின் முதல்வர் டாக்டர் டி.சி. மகேஷ் அவர்களுக்கு, கல்விச் சேவையும் ஆளுமைத் திறமையும் பாராட்டி “சிறந்த முதல்வர்” விருது வழங்கப்பட்டது. இந்த விருது, கன்னியாகுமரியில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் வழங்கப்பட்டது. விழாவில் ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஏ. பிலிப்டன் விருதை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் ஆர். தர்மரஜினி, டாக்டர் ஜோசப் ரூபட் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர். — பாவலர் ரியாஸ்குமரி மாவட்ட செய்தியாளர்

Read More
நாகர்கோவிலில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி !

நாகர்கோவிலில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி !

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாலியல் தொந்தரவு, குழந்தை திருமணம் மற்றும் ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி நாகர்கோவில் இந்து கல்லூரியில் இருந்து தொடங்கி செட்டிகுளம் சந்திப்பு வரை நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களை எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் பொதுமக்கள் அதிகம்…

Read More
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

ஆக் 18, கன்னியாகுமரி அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், 23 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ஓய்வூதியர்களுக்கு பணியில் உள்ள தொழிலாளர்கள் பெறும் அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு, ஒப்பந்த அடிப்படையிலான ஓய்வூதிய…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பரபரப்புஒப்பந்தத் தொகை வழங்காததால் ஒப்பந்ததாரர் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் முயற்சி !

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பரபரப்பு !ஒப்பந்தத் தொகை வழங்காததால் ஒப்பந்ததாரர் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் முயற்சி !

ஆக் 18, திங்கள்நகர் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் நேசமணி நினைவு சிறுவர் பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த பணிக்கான ஒப்பந்தத் தொகை ரூ. 33 லட்சம். ஆனால், அந்தத் தொகையை பேரூராட்சி நிர்வாகம் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒப்பந்ததாரர் தனது குடும்பத்தினர் உடன் கறுப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முனைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து போலீசும், பேரூராட்சி அதிகாரிகளும் நிலைமையை ஆராய்ந்து…

Read More