வாணியம்பாடியில் தனியார் பள்ளி காவலளியை பட்டப்பகலில் மர்ம நபர்களால் குத்திக்கொலை.
வாணியம்பாடி, ஏப்.7- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இக்பால் சாலையில் தனியாருக்கு சொந்தமான நர்ஸரி, பிரைமரி பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஷாகிராபாத் பகுதியை சேர்ந்த முஹம்மத் இஃர்பான் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சுமார் 7.30 மணிக்கு தனது மிதிவண்டியில் பணிக்கு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் முஹம்மத் இஃர்பானை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். முஹம்மத் இஃர்பான் வலியால் துடித்துக்கொண்டு சற்று தூரம் நடந்து சென்று ஒரு…
