பாளையங் கோட்டையில் உள்ள, திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதிரடி சோதனை! கணக்கில் வராத பணம் பறிமுதல்!
திருநெல்வேலி, நவ.18:- நெல்லை மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகம், பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்துக்கு எதிரே, உள்ளது. இங்கு சரவணபாபு என்பவர், துணை இயக்குனராக இருந்து வருகிறார். கல்வி நிறுவனங்கள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, இந்த அலுவலகத்தில் இருந்து தான்,”தடையில்லா சன்று!” (NO OBJECTION CERTIFICATE) என்னும் “சான்றிதழ்” வழங்க வேண்டும். இந்த சான்றிதழ் வழங்குவதற்கு, ஆயிரக்கணக்கில் பணம் லஞ்சமாக பெறப்படுவதாக, நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு, புகார்கள் வந்த `வண்ணமாக இருந்தன. இதனை…
