Headlines
விழுப்புரம் மாவட்ட காவல் துறை சிறப்பாக பணி செய்த காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..

விழுப்புரம் மாவட்ட காவல் துறை சிறப்பாக பணி செய்த காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..

விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் புற காவல் நிலையத்தில் பணி புரியும் தலைமை காவலர் திரு.ராஜசேகர் என்பவர் இரவு (20.11.2025) அன்று பணியில் இருந்த போது திருவண்ணாமலை பேருந்துகள் நிற்கும் தடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த சிறுவனை புறகாவல் நிலையம் அழைத்து வந்து சோதனை மேற்கொண்டதில் கஞ்சா பொட்டலங்கள் என தெரியவந்தது. மேலும் சிறுவனிடம் இருந்து சுமார் 350 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றி சிறார் நீதிமன்றத்தில்…

Read More
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில், 19 கோடி ரூபாய் மதிப்பிலான, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைத்த சபாநாயகர் அப்பாவு! நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பங்கேற்பு!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில், 19 கோடி ரூபாய் மதிப்பிலான, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைத்த சபாநாயகர் அப்பாவு! நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பங்கேற்பு!

திருநெல்வேலி,நவ.22:- தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, நேற்று {நவம்பர்.21} காலையில், தன்னுடைய சொந்த தொகுதியான, திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில், “கூட்டப்புளி” மீனவக் கிராமத்தில், 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பிலான, “கடல் பொருட்கள் மதிப்புக்கூட்டு மையம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம்” அமைக்கும் பணி,”கூத்தன்குழி” மீனவக்கிராமத்தில், 2 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான “மீன் இறங்கு தளம்” அமைக்கும் பணி, “விஜயாபதி” மீனவக் கிராமத்தில், 14 கோடியே…

Read More
பெரியகாடு மீனவர்களின் சிறப்பு பிரார்த்தனை.. உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கடல் அன்னைக்கு மலர் தூவி வழிபாடு...

பெரியகாடு மீனவர்களின் சிறப்பு பிரார்த்தனை.. உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கடல் அன்னைக்கு மலர் தூவி வழிபாடு…

கன்னியாகுமரி மாவட்டம் பெரியகாடு கிராமத்தில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவர்கள் இன்று அதிகாலை சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். கடலில் இறங்கும் முன் தங்களின் படகுகளை அர்ச்சித்து, கடல் அன்னைக்கு மலர் தூவி வழிபாடு நடத்தினர். கடல் பாதுகாப்பிற்கான மரபு வழி பிரார்த்தனையில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர். ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமாகும் மீனவர்களை மீட்க தனிச்சிறப்பான ஹெலிகாப்டர் மீட்பு தளம், கடல் ஆம்புலன்ஸ் சேவை ஆகியவற்றை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மீனவர்கள்…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற,72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின், மாநில அளவிலான நிறைவு நிகழ்ச்சி! கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் பங்கேற்று, 12 ஆயிரம் பேருக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, வழங்கினார்!

திருநெல்வேலியில் நடைபெற்ற 72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின் மாநில அளவிலான நிறைவு நிகழ்ச்சி! கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் பங்கேற்று 12 ஆயிரம் பேருக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!

திருநெல்வேலி,நவ.20:- மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், இம்மாதம் {நவம்பர்} 14- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த, 72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின் நிறைவு நிகழ்ச்சி, இன்று (நவம்பர். 20) காலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை, நேருஜி சிறுவர் கலையரங்கில் நடைபெற்றது. சபாநாயகர் மு. அப்பாவு தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க. நந்த குமார், கூடுதல் பதிவாளர் மு. வீரப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்…

Read More
திருப்பரங்குன்றம் மலையில் நீதிபதி ஆய்வின்போது பறந்த டிரோன் பறிமுதல் யூடியூபர் மீது வழக்கு

திருப்பரங்குன்றம் மலையில் நீதிபதி ஆய்வின்போது பறந்த டிரோன் பறிமுதல் யூடியூபர் மீது வழக்கு

திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நேற்று முன்தினம் மாலை திருப்பரங்குன்றம் மலை மீது சென்று சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்தார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆய்வு செய்தபோது மலையின் மேல் பகுதியில் டிரோன் கேமரா ஒன்று பறந்து படம் பிடித்துக் கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார், டிரோன் கேமரா குறித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த டிரோன் கேமரா, மதுரை…

Read More
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்கிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோவையில் ஆர்பாட்டம்

கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்கிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோவையில் ஆர்பாட்டம்.

கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்கிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோவை ஒருகிணைந்த மாவட்ட திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நடந்தது, அதில், மாவட்ட செயலாளர்கள்,*தொண்டாமுத்தூர் அ.ரவி – துரை.செந்தமிழ் செல்வன் – தளபதி முருகேசன், கோவை M. P,கணபதி ராஜ்குமார், கூட்டணி தலைவர்கள் மற்றும்,ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் * கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்…

Read More
திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து ரீல்ஸ் செய்த நபர்கள் கைது.

திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து ரீல்ஸ் செய்த நபர்கள் கைது.

திண்டிவனம் : நவம்பர், 20. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து, எக்ஸ்பிரஸ் ரயில் பழுதுக்கு காரணமான 5 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை – காரைக்குடி இடையே தினசரி இயங்கி வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 9ம் தேதி மதியம், சென்னை எக்மோரிலிருந்து புறப்பட்டு வந்தது. இந்த ரயில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை கடந்து வந்தபோது, திடீரென ரயில் இன்ஜினில் சத்தம் எழுந்ததால், விக்கிரவாண்டி…

Read More
குருசடியில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழாநாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா சிறப்பு விருந்தினர்.

குருசடியில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழாநாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா சிறப்பு விருந்தினர்.

நாகர்கோவில்; நவ.20 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் குருசடி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ–மாணவியருக்கான இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடை பெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இதன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் ஏற்படும் சிரமம் குறைக்கப்பட்டு, கல்வியில் மேலும் முன்னேற்றம் பெறுவார்கள் என அவர் தெரிவித்தார். தலைமையாசிரியர் அருட்சகோதரி பேரின்பாபாய், ஆசிரியர்கள்,…

Read More
காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு வனத்துறை அளித்த நிவாரண நிதி.

காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு வனத்துறை அளித்த நிவாரண நிதி.

நீலகிரி : நவம்பர்,20. முதுமலை புலிகள் காப்பகம் நீலகிரி வனக்கோட்டம் குந்தா வனச்சாரகம் குந்தா பிரிவு கெத்தை காவல் பகுதிக்கு உட்பட்ட பிரசன்ட் வேலி தனியார் பண்ணை வீட்டின் அருகே விவசாயப் பகுதியில் கடந்த 29 8 2025 ஆம் நாள் காட்டு யானை தாக்கி உயிரிழந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான பேர்லி சுதந்திர ராவ் என்பவருக்கு ஈம சடங்கிற்கு வனத்துறை மூலம் அன்றைய தினமே ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்த நிலையில் இன்று 20.11.2025…

Read More
கடலூர் : ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி.

கடலூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி.

கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திராநகர் பகுதியை வசிப்பவர் அசோக்குமார் வயது (44). மனநலம் பாதிக்கபட்ட இவர் நேற்று வடலூர் காட்டுக்கொல்லை இரல்வே கேட் அருகில் காரைக்கால் நோக்கி சென்ற ரயில் முன் பாயிந்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது இடது கால் துண்டான நிலையில், அவரை மீட்ட அக்கம்பக்கதினர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து கடலூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் R. விக்னேஷ்

Read More