தசரா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்! தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு..!
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை நடக்கவுள்ளது. திருவிழா நேரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யவுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகின்ற 23.09.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 02.10.2025 அன்று இரவு 12 மணிக்கு நடைபெற உள்ளது. இதனையடுத்து 03.10.2025 அன்று கொடியிறக்கம் மற்றும் காப்புதரித்தல் நிகழ்ச்சியுடன் இத்திருவிழா நிறைவு பெறும்….
