Headlines
கோவை PSG கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

புகையில்லா போகி பண்டிகை கொண்டாடிட வலியுறுத்தி கோவை PSG கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி.

கோவை மாவட்ட செய்தியாளர் சம்பத்குமார்இன்று 11-01-2025 காலை கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு சார்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடிட வலியுறுத்தி கோவை PSG கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு தலைவர், கோவை மாநகர் மாவட்டம் வர்த்தகர் அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் பேரணியாக சென்று உக்கடம் பேருந்து நிறுத்தம் பொதுமக்களிடம் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடிட வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் சமூக சிந்தனையுடன் கூடிய சமதர்ம சமத்துவப் பொங்கல் ரங்கப்பனூர் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் (10/01/2025) காலை 12 மணியளவில் ஊராட்சி மன்ற தலைவர் R.M.S.K #அர்ச்சனாகாமராஜன் அவர்களின் தலைமையிலும் கழக நிர்வாகிகள் முன்னிலையிலும் சிறப்பு விருந்தினராக சங்கராபுரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் B.N.R.அசோக்குமார் அவர்கள் கலந்து கொண்டு சமத்துவப் பொங்கல் விழாக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில் குமார் அவர்களும் மற்றும் ஒன்றிய பொருளாளர் நலத்தம்பி…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு கீழ் பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றிதழ்களுடன் மாதம் ரூபாய் 1500 வழங்க தேர்வு செய்யப்பட்டனர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு கீழ் பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றிதழ்களுடன் மாதம் ரூபாய் 1500 வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அடங்கிய மருத்துவ குழுவின் மூலம் மாத உதவி தொகை வேண்டி விண்ணப்பித்த 112 மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று மருத்துவ சான்றிதழ் ஆய்வு செய்து 112 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூபாய் 1500 வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 18000 மதிப்பில் சிறப்பு மடக்கு சக்கர…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பாலப்பட்டு உயர்நிலைப் பள்ளியில் குரலும் பொருளும் தொடக்க விழா மற்றும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பாலப்பட்டு உயர்நிலைப் பள்ளியில் குரலும் பொருளும் தொடக்க விழா மற்றும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நடைபெற்றது.

குறளும் – பொருளும்தொடக்கவிழா….திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டும், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும் கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக “குறளும் பொருளும்” நிகழ்வு மாவட்ட மாநில நிகழ்வின் தொடக்கமாக இன்று சங்கராபுரம் வட்டம் புதுப்பாலப்பட்டு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தலைமையாசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார், மாவட்ட முத்தமிழ்ச்சங்கத் தலைவர் மு.முருககுமார் வரவேற்புரை ஆற்றினார், மாவட்டசிறப்புத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்டச்செயலாளர் பழனிவேல், மாவட்டத்துணைத்தலைவர் காயத்ரி, மாவட்ட முத்தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர்கள் சௌந்தராசன், ஓவியர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை…

Read More
பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

தைத்திருநாளில் தித்திக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை, தமிழர் நலத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80 வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும், மக்கள் அனைவரும் தித்திக்கும் பொங்கல் பண்டிகையை இனிமையாக கொண்டாடி மகிழ்ந்திட திராவிட…

Read More
திருநெல்வேலியில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம்! மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

திருநெல்வேலியில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம்! மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

திருநெல்வேலி,ஜன.9:-திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், புதன்கிழமை [ ஜனவரி.8] மாலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர் வி. கீதா சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், நாங்குநேரி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில், ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கான, இடங்களை…

Read More
தேசிய அளவில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முதலிடம்

தேசிய அளவில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முதலிடம்.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 557 படுக்கை வசதியுடன் பல்வேறு சிறப்பான சிகிச்சை வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.2022 ம் ஆண்டு ஜூலை மாதம் தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் NQAS எனும் தேசியதர சான்றினை பெற்றது. 2023 ம் ஆண்டு KAYAKALP எனப்படும் மருத்துவமனை மற்றும் சுற்றுப்புறம் தூய்மை பராமரிப்பினை ஆய்வு செய்து தேசிய அளவில் சான்று மற்றும் ஊக்க தொகை வழங்கப் படுகிறது, அதில் தென்காசி மருத்துவமனை மாநில அளவில்…

Read More
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் உடல், இறுதி மரியாதையுடன் உறவினர்களிடம் ஒப்படைப்பு! மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவமனை தலைவர் பங்கேற்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் உடல், இறுதி மரியாதையுடன் உறவினர்களிடம் ஒப்படைப்பு! மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவமனை தலைவர் பங்கேற்பு!

திருநெல்வேலி,ஜன.8:- திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து “கரையிருப்பு” பகுதியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி இசக்கி பாண்டி [வயது.36]. இவர், தன்னுடைய மனைவி சுப்புலட்சுமியுடன், கடந்த சனிக்கிழமை [ஜன.4] நள்ளிரவு 12-30 மணியளவில், மானூர் வழியாக, கரையிருப்புக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட கணவனும், மனைவியும் சாலையில் சுயநினைவின்றி கிடந்தனர். இதே நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். கணவர்…

Read More
திருநெல்வேலி தாழையூத்து சங்கர்நகரில், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற, மின் சிக்கன வாரவிழா, விழிப்புணர்வு பேரணி! மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் துவக்கி வைத்தார்!

திருநெல்வேலி தாழையூத்து சங்கர்நகரில், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற, மின் சிக்கன வாரவிழா, விழிப்புணர்வு பேரணி! மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் துவக்கி வைத்தார்!

திருநெல்வேலி,ஜன.7:- தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக, “மின்சார சிக்கன வார விழா” ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி முதல், டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி வரையிலும் கொண்டப்படுகிறது‌. அந்த காலகட்டத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில், மழையும்- வெள்ளமுமாக இருந்ததால், இந்த வாரவிழாவை நடத்த இயலவில்லை. எனவே, திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தின், திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தில் பொது மக்களிடையே, மின் பயன்பாட்டில் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் நோக்கத்தில், இம்மாவட்டம் சங்கர் நகர், தாழையூத்து…

Read More
ஆளுநரை கண்டித்து தென்காசியில் ஆர்ப்பாட்டம்

ஆளுநரை கண்டித்து தென்காசியில் ஆர்ப்பாட்டம்.

தென்காசி ஜனவரி 7- தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பாக தமிழக ஆட்சியையும் தமிழர்களையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து புறக்கணிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் கலை கதிரவன் மாவட்ட துணைச் செயலாளர்கள் கென்னடி கனிமொழி…

Read More