இதழ்கள்
பேயன்குழியில் 18 வயது இளம்பெண் மரணம் – தற்கொலையா..? மர்மக் கொலையா..?
செப் 21 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி பகுதியை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றது. வீட்டினுள் அஸ்வினி (18) என்ற இளம்பெண், உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தீக்காயத்தில் உயிரிழந்த நிலையில் இருந்த இளம்பெண்ணை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக இரணியல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதற்கிடையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக (தமுமுக) மருத்துவ…
ஒன்றிய அரசின் வாக்குத்திருட்டை கண்டித்து – குற்றாலத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் !
தென்காசி, செப் – 2 1 – குற்றாலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசின் வாக்குத் திருட்டையும், இதில் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக வாக்கு திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குற்றாலம் தெஷ்ண மாற நாடார் சங்கத்தில் வைத்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் ராம் மோகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு…
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை தூய்மை பணி…
செப் 21 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில், மாவட்டத்தில் உள்ள பல கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்றது. கோவளம், துவாராக, பதி, சொத்த விளை, கணபதிபுரம் லெமூரியா பீச், மணவாளக்குறிச்சி பீச், மண்டைக்காடு, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த முறையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், முன்னாள் ராணுவத்தினர் உட்பட 400க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்று கடற்கரை பகுதிகளைச் சுத்தம்…
மதுரையில் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது…
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் 2025 கான பொதுக்குழு கூட்டம் மதுரையில் கமல்ஹாசன் தலைமையேற்று நடந்த அனைத்து நிர்வாகிகள் முன்மொழிவை கடிதமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடன் வழங்கப்பட்டது. இந்த செயற்குழு கூட்டம் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் R.சொக்கர் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…
கோவை மாநகராட்சியில் சத்தமில்லாமல் நடக்கும் பணிகள்..
கோவை பகுதியில், விறுவிறுப்பாக நடக்கும் பணிகள் . கோவை மாநகராட்சியை பொறுத்தவரை தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகராட்சியாகும். மக்கள் தொகை அடிப்படையிலும் சரி, பரப்பளவு அடிப்படையிலும் சரி, சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக உள்ளது. கோவை மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக இருக்கிறது. இங்கு மாநகராட்சி பகுதியில் மட்டும் சுமார் 7 ஆயிரம் சாலைகள் உள்ளன. தற்போது சாலைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. தற்போது 277 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை பணிகள்…
ஸ்டார் குரு அவர்களுக்கு மஞ்சப்பை வழங்குதல்…!
மதுரை, சேதுபதி மேல்நிலைப் பள்ளியில், மதுரை இலக்கிய பேரவையின் சார்பாக நடைபெற்ற முப்பெரும் விழாவில் நட்சத்திர அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்டார் குரு அவர்களுக்கு தொடர்ந்து மஞ்சப்பை விழிப்புணர்வு செய்து வரும் சமூக ஆர்வலர்கள் ஷேக் மஸ்தான் மற்றும் நூருல்லாஹ் மஞ்சப்பை வழங்கி வாழ்த்து பெற்றனர். மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி.
கடலூர் – பிரதமரை விமர்சித்த தாவாக தலைவர்…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி எம்எல்ஏ மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடியே!இந்திய பெறுநிலத்தில் வாழும் அனைத்து மொழிவழித் தேசிய இணங்களையும் மதியுங்கள் என விமர்சித்துள்ளார். மேலும் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்வில்,குஜராத்தி மொழியில் பேசாமல் இந்தியில் பேசியற்க்காக, அங்குள்ள பொதுமக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல 363 வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது…
தென்காசி : செப் – 21 –தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும்,அனைத்து மதத்தினராலும் சர்வேஸ்வரன் ஆலயம் என அழைக்கப்படும் இவ் ஆலயத்தின் ஒவ்வொரு ஆண்டு பெருவிழாவானது செப்டம்பர் 20 ல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தின் 363 வது ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் அகரக்கட்டு இறை மக்கள் பங்கு தந்தை அருட்பணி அலாசியஸ் துரைராஜ் அடிகளார் தலைமையில் ஊர்…
கோத்தகிரியில் – திமுக WAR ROOM திறப்பு.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நீலகிரி மாவட்ட திமுக.,விற்கான “அண்ணா அறிவாகம்” எனும், WAR ROOM-ஐ கழக துணை பொதுச்செயலாளர் – நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ.இராசா அவர்கள், தேர்தல் பணி செயலாளர் – அரசு கொறடா மாண்புமிகு கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் திறந்து வைத்தார்.
பெண்கள் அதிகாரமளிப்பு கார் ராலி – உலகச் சாதனை படைத்த ஜேசிஐ தூத்துக்குடி பெம் ஸ்டார்ஸ்..!
செப் 21, கன்னியாகுமரி – பெண்கள் அதிகாரமளிப்பை முன்னெடுக்கும் வகையில், ஜேசிஐ தூத்துக்குடி பெம் ஸ்டார்ஸ், சார்பில் நடைபெற்ற கார் ராலி உலகச் சாதனையாகப் பதிந்தது. இந்த முயற்சியின் மூலம், ராலி தூத்துக்குடியில் தொடங்கி கன்னியாகுமரியில் நிறைவடைந்தது. இடையே பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கோவா, மங்களூர், காளிக்கட், கொச்சி உள்ளிட்ட பல நகரங்களை கடந்து மொத்தம் 4600 கி.மீ. தூரம் பெண்கள் விழிப்புணர்வு செய்தியுடன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி, குளோபல் வேர்ல்ட் ரெகார்ட் எனும் பெருமையைப் பெற்றது. இந்த…
