இதழ்கள்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே விபத்து.
செப் 20 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையம் அருகே இன்று காலை பரபரப்பு விபத்து ஏற்பட்டது. சாலையில் சென்றுகொண்டிருந்த டாறஸ் லாரியின் டயர் திடீரென வெடித்து சட்டென நின்றது. அந்த சமயம் பின்னால் வந்த கேரள அரசு பேருந்து லாரியை மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து நடத்துனர் மற்றும் இரு சிறுவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக தக்கலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை…
வகுப்பறையில் தொழில்நுட்ப ஒழுங்கு – பயோனியர் குமாரசுவாமி கல்லூரி வணிகவியல் துறையின் புதுமை முயற்சி.
செப் 20 கன்னியாகுமரி நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரி வணிகவியல் துறை, மாணவர்களின் கல்வியில் தொழில்நுட்பத்தை பயனுள்ள முறையில் ஒருங்கிணைக்க “மொபைல் ஒழுங்குபடுத்தப்பட்ட வகுப்பறை” (Mobile-Regulated Classroom) என்ற புதுமை முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றைய மாணவர்களின் வாழ்வில் மொபைல் போன் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகி விட்டது. கற்றலுக்கான வாய்ப்புகளுடன், அதன் அதிகப்படியான பயன்பாடு, அடிமைத்தனம் மற்றும் தவறான பயன்பாடு போன்ற சவால்களையும் மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் வகுப்பறைக்கு வந்தவுடன் தங்களது மொபைல்…
ஆம்பூர் அருகே அரசு பள்ளியில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் சிறப்பு கல்வி மையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் சிறப்பு கல்வி மையத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்க்கொண்டார், அப்போது சிறப்பு கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்ககள், அமைச்சரிடம் மாதனூர் வட்டாரத்தில் இங்கு மட்டுமே இந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு…
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு வரவேற்பு.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அண்ணன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை வாணியம்பாடி நகர கழக செயலாளர், நகர மன்ற உறுப்பினர் திரு. V.S. சாரதி குமார் BE.,MC அவர்கள் வாணியம்பாடியில் வரவேற்பு அளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட பிரதிநிதி திரு.ம.பா. சாரதி MC,தொழிலதிபர் திரு. ஜெனமே ஜெயன், வார்டு செயலாளர் திரு. ஜெயகாந்தன்,மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் திரு.R.சிரஞ்சீவி குமார், நகர இளைஞரணி…
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்குச் சுசீந்திரம் அம்மன் விக்ரக ஊர்வலம்.
செப் 19 கன்னியாகுமரி திருவனந்தபுரம் நவராத்திரி விழாவை முன்னிட்டு, மன்னர்களின் கால பாரம்பரிய மரபுப்படி கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலிலிருந்து அம்மன் விக்ரகம், தமிழக – கேரள இரு மாநில போலீசாரின் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டது. முத்துக்குடைகளும் பாரம்பரிய இசைக்குழுக்களும் ஒலித்திட, ஏராளமான பக்தர்கள் வழியனுப்பி வணங்கினர். வருடந்தோறும் நடைபெறும் இவ்விழா, தமிழகம் – கேரளத்தை இணைக்கும் கலாசாரச் சங்கமமாகக் கருதப்படுகிறது. அம்மன் விக்ரகம் ஊர்வலமாகச் சென்று திருவனந்தபுரத்தில் நடைபெறும்…
குமரி மாவட்டம் களியல் அருகே கிலாத்தூர் பகுதியில் பரபரப்பு !
செப் 19 கன்னியாகுமரி – குமரி மாவட்டம் களியல் அருகே கிலாத்தூர் பகுதியில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் நேற்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் மிகப் பெரிய மலைப்பாம்பு ஒன்று தோன்றியது. தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் திடீரென மரத்தடியில் அசைவு ஏற்பட்டதை கவனித்தனர். அருகே சென்று பார்த்தபோது, சுமார் 12 அடியளவு நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சுருண்டபடி இருந்தது. அச்சத்தால் தொழிலாளர்கள் கூச்சலிட்டதும், அப்பகுதி மக்கள் கூடிவந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல்…
விழுப்புரம் மாவட்டம் காவல்துறை போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்மாற்றியை மாற்றி அமைத்த காவல் அளிநர்களுக்கு நன்றி சான்றிதழ்.
விழுப்புரம் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் புதுச்சேரி விழுப்புரம் சாலையில் இருந்து மின்மாற்றி பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்ததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.திரு..ப. சரவணன்.இ.கா.ப. அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர்.தி.ரு.ஷே.ஷேக். அப்துல் அவர்களின் உத்தரவின் பெயரில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். திரு. லட்சுமணன் அவர்களின் உதவியுடன் விழுப்புரம் உட்கொண்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.திரு. ரவிந்திர குமார் குப்தா .இ.காப அவர்கள் தலைமையில்…
நடிகர் ரோபோ சங்கர் காலமானார் !
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்(46) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னையில், நேற்று ஷூட்டிங்கின்போது மயங்கி விழுந்த அவர் தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. இவர், விஸ்வாசம், மாரி, வேலைக்காரன், புலி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஒரு கோடி கையெழுத்து இயக்கம்” – நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி தொடங்கி வைத்தது.
மத்திய பாஜக அரசு வாக்கு திருடியதை கண்டித்து கன்னியாகுமரி மாநகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் “ஒரு கோடி கையெழுத்து இயக்கம்” இன்று (வியாழக்கிழமை) தொடங்கப்பட்டது. நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் நவீன்குமார் தலைமையேற்றார். பொதுமக்கள் இடையே பாஜக அரசின் எதிர்மறை செயல்பாடுகளை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் கையெழுத்து சேகரிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை…
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊட்ட சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள்* 1.பேரிச்சம்பழம்2.ஹெல்த் மிக்ஸ் பவுடர்3.முட்டை4.கொண்டைக்கடலை5.பச்சைப்பயிறு6.மணிலா7.மொச்சை பயறு8.அவில் வழங்கும் விழா… இன்று 18-09-2025 நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி R.M.S.K #அர்ச்சனாகாமராஜன் அவர்கள் சுமார் 20 காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் அவர்களின் தலைமையில் மருத்துவ அலுவலர்கள் முத்துக்குமரன் மருத்துவர் ரஞ்சிதா அவர்கள் நோயாளிகளுக்கு காச நோய் தடுப்பு…
