இதழ்கள்
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே, லெப்பைக்குடியிருப்பு பகுதியில், புதிதாக அமைக்கப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதையை, மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்த, சபாநாயகர் அப்பாவு!
அக்.3:-திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட, பணகுடி அருகே உள்ள “லெப்பை குடியிருப்பு” கிராமத்திற்கு செல்லும் ரெயில்வே பாதையானது, தற்போது புதிதாக சுரங்கப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சுரங்கப்பாதையை, ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவருமான மு. அப்பாவு, இன்று (அக்டோபர். 3) காலையில், ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, மக்களின் பயன்பாட்டுக்கு, அர்ப்பணித்தார். கடந்த ஒரு வருடமாக, இந்த ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள், இடைவெளியின்றி நடைபெற்று வந்த நிலையில்,…
கன்னியாகுமரி மாவட்டம் – சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் பலி.
அக் 03 கன்னியாகுமரி மணவாளகுறிச்சி பாலம் சந்திப்பில் அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதியதில் பரிதாபமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே நேரத்தில் ஆட்டோவில் பயணித்த பயணிகள் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். தகவல் அறிந்ததும், மணவை குமரி டிரஸ்ட் சகோதரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி…
கரூர் துயரம் – உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் எந்தெந்த வழக்குகளில் என்னென்ன உத்தரவு.?
சிபிஐ விசாரணை கோரிய பொது நல மனுக்கள் :- விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி, இழப்பீடை உயர்த்தக் கோரிய பொதுநல மனுக்கள்: பாதிக்கப்பட்டோர் தரப்பில் இதனை மனுவாக்க தாக்கல் செய்யவும், 2 வாரங்களில் விஜய் மற்றும் அரசுத் தரப்பு இது குறித்து பதிலளிக்கவும் உத்தரவு. பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய பொதுநல மனுக்கள்: சென்னை அமர்வில் இது தொடர்பான மனு நிலுவையில் இருப்பதால், இடைக்கால் உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், இந்த மனுக்களையும்…
திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான மாணவிகள் ஹாக்கி போட்டியை, துவக்கி வைத்த சபாநாயகர்! மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன், மேயர், துணைமேயர் பங்கேற்பு!
திருநெல்வேலி, அக. 3:- நெல்லை பாளையங்கோட்டை, அண்ணா விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான மாணவிகள் ஹாக்கி போட்டியை, இன்று (அக்டோபர். 3) காலையில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, துவக்கி வைத்தார். துவக்க விழா நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தலைமை வகித்தார். திருநெல்வேலி நாடாளுமன்ற உறப்பினர் வழக்கறிஞர் சி. ராபர்ட் புரூஸ், நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன், துணை மேயர் கே. ஆர். ராஜூ…
கடலூர் : நர்ஸ் வீட்டில் ரூ 15 லட்சம் பணம் -நகை திருட்டு.!
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் அன்பழகன் இவரது மனைவி என் எல் சி பொது மருத்துவமனையில் தலைமை நர்ஸ்சாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 19 பவுன் நகை மற்றும் 5 வெள்ளி கொலுசு, கேமரா,ரூ 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றனர். அதன் மதிப்பு ரூ 15லட்சம் இருக்கும். இது குறித்து நெய்வேலி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி செய்தியாளர்…
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டம் ஒன்பதாவது சோதனை சாவடியில், 2/10/2025 அன்று வன உயிரின வார விழா தொடங்கப்பட்டது..
அதை முன்னிட்டு கேரளா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு , வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்தும், நெகிழிப்பைகள் பயன்பாட்டால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நெகிழியை தவிர்ப்போம்.! புவியை காப்போம்.! என்ற தலைப்பில் அமராவதி வனச்சரக அலுவலர் புகழேந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நெகிழிப்பைக்கு மாற்றாக மஞ்சப்பை வழங்கப்பட்டது.. இதில் உடுமலை வனச்சரக அலுவலர் வாசு, வனவர்கள், வன காவலர்கள் மற்றும் வனப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.
நாகர்கோவில் – கோட்டார் ரயிலடி திடலில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் 20-ஆவது ஆண்டு ஆயுத பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது..
அக் 02 கன்னியாகுமரி – ஆட்டோ சங்க ஆயுத பூஜை விழா உற்சாகம் நாகர்கோவில் – கோட்டார் ரயிலடி திடலில் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் 20-ஆவது ஆண்டு ஆயுத பூஜை விழா நேற்று உற்சாகமாக நடைபெற்றது. விழாவில் திராவிட முன்னேற்ற கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் மாநில துணைச் செயலாளரும், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி பார்வையாளருமான வழக்கறிஞர் மு. சிவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் பி.எம்.சி. மோகன் (கிழக்கு மாவட்ட விவசாய…
திருநெல்வேலியில், மகாத்மா காந்தியடிகள் தங்கியிருந்த வீட்டில் நடைபெற்ற, காந்தி ஜெயந்தி விழா! அண்ணலாரின் திருவுருவப்படத்திற்கு, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ்ச்சான்றோர்!
திருநெல்வேலி, அக். 2:-மகாத்மா காந்தியடிகள், திருநெல்வலி டவணில், “தேசபக்தர்” சாவடி கூத்த நயினார் பிள்ளை இல்லத்தில் அரிஜன,புனித யாத்திரை நிகழ்வின் போது, 1934 -ஆம் வருடம் ஜனவரிமாதம் 23,24 ஆகிய இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். அவர்களின் விருந்தோம்பலில் மகிழ்ந்து, கூட ஒரு நாள் தங்கினார். நெல்லையில், காந்தியடிகள் தங்கியிருந்து மகிழ்ந்த அந்த இல்லத்தில், அவர் தங்கியிருந்த அறை புனிதமாக கருதப்பட்டு, இனறும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த புனித அறையில், மகாத்மா காந்தியின் 157-வது பிறந்த நாள் விழா,…
திருநெல்வேலி மாவட்டத்தில், ஜாதி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல்துறையினரால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, குறிப்பிடத்தக்க அளவில் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன! மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல்!
திருநெல்வேலி, அக். 2:-திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரன், இன்று ( அக்டோபர். 2) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் குறிப்பிட் டிருப்பதாவது:-“சமீப காலங்களில், சமூக ஊடகங்கள் வாயிலாக, சில இளைஞர்கள் தங்களது சமுதாயத்தை உயர்த்தும் விதமாகவும், பிற சமுதாயங்களை தரம் தாழ்த்தும் விதமாகவும், உள்ளடக்கங்களை பகிர்ந்து வருகின்றனர். இது, சமூகத்தில் ஜாதிய உணர்வுகளை தூண்டும் அபாயத்தை உருவாக்கி, பொதுமக்களிடையே தவறான புரிதல்கள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. சமூக அமைதிக்கு இடையூறாக…
உடுமலையில் உள்ள பல்வேறு கோவில் மற்றும் பள்ளிகளில் இன்று விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.
அக் 02. உடுமலை திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பல்வேறு கோவில்களில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு கட்டமாக இன்று 10 நாள் நிகழ்ச்சி விஜயதாசமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகிஷாசுரன் எனும் அரக்கனை தேவி பல்வேறு அவதாரங்கள் எடுத்து போரிட்டு இறுதியில் 10-ம் நாளில் மகிஷாசுரனை அளித்தார் என்பது புராண கால வரலாறு,வெற்றியின் நாளாக கருதப்படும் விஜயதசமி நாளில் தொடங்கப்படும் எந்த காரியமும் வெற்றியில் முடியும் என்பது மக்களில் நம்பிக்கை, அதன் படி…
