இதழ்கள்
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், குஞ்சப்பனை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கோத்தகிரி : நவம்பர்,01 மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், குஞ்சப்பனை ஊராட்சியில் இன்று (1.11.2025)நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு அரசு தலைமை கொறடா திரு. கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு ஊராட்சியில் நடைபெற்ற மற்றும் நடைபெறவிருக்கும் பணிகளை கூறி பொதுமக்களிடம் கலந்துரையாடினார். இக்கிராம சபைக்கூட்டத்தில், ஊரகப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மகாத்மா காந்தி…
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி அரசியல் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம்.
உடுமலை : நவம்பர் 01. தமிழ்நாட்டில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் உடுமலை ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஆர்டிஒகுமார் தலைமை தாங்கினார். இதில் அனைத்து அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர் .அப்போது சிறப்பு பணிகள் தொடர்பான அரசியல் கட்சியினருக்கு ஆர்டிஓ விளக்கம் அளித்தார். பின்னர்…
அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு.
உடுமலை : நவம்பர் 01. பூளவாடி அரசு மேனிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் அறக்கட்டளை மற்றும் உடுமலைப்பேட்டை வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் தமிழ்நாடு காவல்துறை இணைந்து பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் போக்சோ சட்டம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. உடுமலை வழக்கறிஞர் .சத்தியவாணி கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தலைமையாசிரியர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.குடிமங்கலம் காவல்துறையினர் சட்ட உதவி பற்றி கூறினர். நிறைவாக ஆசிரியை மங்களவினாயகி நன்றி கூறினார்.
உடுமலை அருகே உள்ள பள்ளபாளையம் பகுதியில் சிதிலமடைந்த பாளையக்காரர் சிலைகள்.
உடுமலை : நவம்பர் 01, தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சிக்குப்பிறகு நிலப்பகுதிகள் பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வை செய்ய பாளையக்காரர்கள் அமைக்கப்பட்டனர். 18 ஆம் நூற்றாண்டு வரை பாளையக்காரர்களின் ஆட்சி இந்த மண்ணில் இருந்துள்ளது. பிற்பாடு அவர்கள் ஜமீன்தார்களாகவும், நிலக்கிழார்களாகவும் மாறிவிட்டனர். உடுமலையைச்சுற்றியுள்ள பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட பாளையங்கள் நிர்வாகத்தில் இருந்தன. உடுமலை வட்டம் பள்ளபாளையம் ஊரின் தெற்குப்பகுதியில் சிறிய சிவன் கோயில் உள்ளது. கோயிலுக்கு வெளியே சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருக்கும் கற்சிலையில் கைகூப்பி நின்ற நிலையில் உள்ள…
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுமா? நெல்லையில் சபாநாயகர் அப்பாவு அதிரடி பேட்டி!
திருநெல்வேலி,நவ.1:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பொட்டல் என்னும் இடத்தில், இன்று (நவம்பர். 1) காலையில், அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு.அப்பாவு, சாதாரண முறையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:- “அதிமுகவிலிருந்து சட்ட மன்ற உறுப்பினர் செங்கோட்டையன் நீக்கம் செயயப்பட்டது தொடர்பாக, எந்தக்கடிதமும் இதுவரையிலும் சட்டப்பேரவைக்கு தரப்படவில்லை. அவ்வாறு கடிதம் கொடுக்கும் பட்சத்தில், அது குறித்து பரிசீலனை செய்யப்படும். அதிமுக அளிக்கும் ஆவணங்களின் அடிப்படையில், உரிய…
பாசன பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி மாவட்டத்தில், ஒரே நேரத்தில் பாபனாசம், மணிமுத்தாறு ஆகிய, இரண்டு அணைகளில் இருந்து, தண்ணீர் திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு!
திருநெல்வேலி,நவ.1:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், பாபனாசம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரண்டு அணைகளில் இருந்தும், நடப்பு பிசான பருவ சாகுபடிக்காகவும், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்காகவும், இன்று (நவம்பர்.1) காலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்இரா.சுகுமார் தலைமையில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், முன்னாள் சபாநாயகர் இரா. ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலையில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு,…
உடுமலை அருகே வெள்ளை செட்டிபாளையம் கிராமத்தில் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள்.
உடுமலை நவம்பர் 01. ஊருக்கு நடுவில் சுகாதாரகேடு ஏற்படுத்திவரும் கோழிப்பன்னையைஅகற்ற கோரி வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆர்பாட்டம். தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் எச்சரிக்கை திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குப்பம்பாளையம் ஊராட்சிகுட்பட்ட வெள்ளை செட்டிபாளையத்தில் அம்மன் பார்ம்ஸ் என்ற தனியார் கோழிப்பன்னை செயல்பட்டு வருகிறது ஊருக்கு நடுவே செயல்பட்டுவரும் இந்த கோழிப்பன்னையால் ஊர் முழுதும் துர்நாற்றமும் ஈக்கள் தொந்தரவும் அதிகரித்து வருவதோடு ஊர் மக்கள் அடிக்கடி நோய் வாய்ப்படுவதும் வாடிக்கையாகி வந்துள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கன் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி , மடத்துக்குளம் வட்டாரம், கணியூர், ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் திராவிட மாடல் அரசின் ” நலம் காக்கும் ஸ்டாலின் ” மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் , மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் ஆகியோர் துவக்கிவைத்தனர்.. இந்நிகழ்வில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி அவர்கள், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் அவர்கள் , மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் அவர்கள் , மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.சாகுல் அமிது, அரசு அதிகாரிகள், மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.. முகாமில் பீகார்…
உடுமலை: ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை…
உடுமலைநவம்பர் 1. உடுமலை அக்.31-உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா அமைக்க ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை-திண்டுக்கல் அகல ரயில் பாதையில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இதன் வழியாக கோவை-மதுரை, திருவனந்தபுரம்-ராமேஸ்வரம் பாலக்காடு-திருச்செந்தூர் பாலக்காடு- சென்னை திருநெல்வேலிக்கும் ரயில்கள் செல்கின்றன. இதனால் ஏராளமான பயணியர் ரயில்களில் செல்ல இங்கு வருகின்றனர் .இங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பயணியரின் பாதுகாப்பு கருதியும் சமூக விரோத…
சேலைகள் கட்டி வரப்புகளில் பாதுகாப்பு: காட்டுப்பன்றிகள் ஊடுருவலால் அலறல்
உடுமலை அக்டோபர் 31. உடுமலை:காட்டுப்பன்றிகள் தாக்குதலில், இருந்து பயிர்களை காப்பற்ற, சேலை கட்டுவதற்கு மட்டும், ஏக்கருக்கு, 5 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.உடுமலை அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறி, கிராமங்களில், காட்டுப்பன்றிகள் கூட்டம் முகாமிட்டுள்ளன. அனைத்து வகையான சாகுபடிகளிலும், காட்டுப்பன்றிகளால், சேதம் ஏற்பட்டு வருகிறது. அறுவடைக்கு தயாராகும் போது, ஏற்படும் சேதத்தால், பொருளாதார சேதத்தை விவசாயிகள் சந்திக்கின்றனர். குறிப்பாக, மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை சாகுபடியில், அதிக சேதம் ஏற்படுகிறது. காட்டுப்பன்றிகளை விரட்ட…
