Headlines

மடத்துக்குளம் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

மடத்துக்குளம் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க
15/10/2025 அன்று மடத்துக்குளம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட 6,7,8,9,13,14,16,17,18 ஆகிய வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மடத்துக்குளம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி அவர்கள் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்… வருவாய் துறை சம்பந்தமாக 410 , கலைஞர் மகளிர் உதவித்தொகை சம்பந்தமாக 393 ,என மொத்தம் 865 விண்ணப்பங்கள் பெறப்பட்டது..

நிகழ்ச்சியில் மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் கலைவாணி பாலமுரளி,
சமூக பாதுகாப்பு திட்டம் வட்டாட்சியர் கௌரிசங்கர்
மடத்துக்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் கே.பழனியப்பன்,
திமுக மடத்துக்குளம் பேரூர் கழக செயலாளர் என்.பாலகிருஷ்ணன்,
மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் SR.ரங்கநாதன்,
மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.ஏ.சாகுல் ஹமீது ,
மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் வி.மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி,
மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் துரை.பாலமுரளி ,
மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ஜெயக்குமார்
மடத்துக்குளம் பேரூர் கழக நிர்வாகிகள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பேரூர் கழக இளைஞரணி- மாணவரணி மகளிர்அணி, பேரூர் கழக கிளை செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *