திருநெல்வேலி, செப். 26 :-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், தமிழ்நாடு சடடமன்ற உறுப்பினருமான கு.செல்வப் பெருந்தகை குறித்து அவதூறாக பேசிய, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி K.பழனிச்சாமியை கண்டித்து, இன்று (செப்டம்பர். 25) காலையில், திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், அதன் தலைவர் K.சங்கரபாண்டியன் தலைமையில், எடப்பாடி பழனிச்சாமியின், உருவ பொம்மைக்கு, செருப்பு மாலை அணிவித்து, வாரியாலால் அடித்து கொளுத்த முயன்றனர்.
அப்பொழுது அங்கு பாதுகாப்புக்காக காவல்துறையினர், சட்டென சீறிப்பாய்ந்து, காங்கிரசாரின் கூடடத்துக்குள் நுழைந்து, பழனிச்சாமியின் உருவ பொம்மைக்கு, தீ வைக்க முடியாதவாறு, அதனை பறித்துச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில், மண்டல காங்கிரஸ் தலைவர்கள் கெங்கராஜ், S.S. மாரியப்பன், ரசூல் மைதீன், வட்டார காங்கிரஸ் தலைவர் மானூர் கணேசன், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர்கள் ராமகிருஷ்ணன், வெள்ளப் பாண்டியன், தியாக சுரேஷ், “வண்ணை” சுப்பிரமணியம், மாவட்ட பொதுச்செயலாளர் “குறிச்சி” கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சின்னப்பாண்டி, நிர்வாகிகள் சுலைமான், “சம்சா” செய்யது அலி, மாவடட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் காளை ரசூல், லெனின் பாரதி, சிவாஜி அய்யாதுரை, INTUC நாகூர் மைதீன், ஊடகப்பிரிவு தலைவர் மாரிக்கண்ண, புல்லட் மோசஸ், மாணவர் காங்கிரஸ் நிர்வாகி ஆகாஷ், சிறுபான்மை பிரிவு தலைவர் அருள்தாஸ், நிர்வாகிகள் “தென்கலம்” சுரேஷ், எபநேசர், சிந்தா மதார், சுந்தர்,
ராணுவ பிரிவு நிர்வாகிகள் அலெக்ஸ், அனந்த பத்மநாபன், அமைப்புசாரா காங்கிரஸ் தலைவர் ஜாகீர் உசேன், விவசாய பிரிவு செயலாளர் முத்து ராமலிங்கம், நிர்வாகிகள் சுல்தான் காஜா, சரோஜா ராஜ், மகளிர் அணி மெட்டில்லா, தச்சை மண்டல காங்கிரஸ் துணைத் தலைவர்கள் மணிகண்டன், நாராயணன் ஆகியோர் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” – ஹஸன்.
