திண்டுக்கல், செப் : 24
திண்டுக்கல் சிறுமலை, தாழக்கடையை சேர்ந்தவர் மீனா (45).இவரின் உறவினர் சங்கர் (25).இருவரும் சிறுமலை வனப்பகுதியிலிருந்து சுமார் 5 கிலோ மதிப்பிலான சந்தன மரத்துண்டுகளை வெட்டி பேக்கில் போட்டு மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்தனர் இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில், சிறுமலை வனச்சரக அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் பிடித்து தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.மேலும் அவர்களிடமிருந்து சந்தன துண்டு கட்டைகள் பறிமுதல் செய்தனர்.
