Headlines

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் – கோரிக்கைகள் வலியுறுத்தல்…

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் – கோரிக்கைகள் வலியுறுத்தல்...

செப் 22, கன்னியாகுமரி –

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு இன்று மாலை, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திமுக அரசு தனது 313வது வாக்குறுதியான “அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக மாற்றுவோம்” என்ற வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாததை கண்டித்து இந்நிகழ்வு நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு பணியாளர்களாக மாற்ற வேண்டும்,

மாதம் ரூ.26,000 குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்.

ஓய்வூதியமாக ரூ.9,000 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும்,

பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இவ்வார்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

குமரி மாவட்ட செய்தியாளர் – பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *