Headlines

நெடுஞ்சாலை ரோந்து தலைமை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு.

நெடுஞ்சாலை ரோந்து தலைமை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு.

வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன்பட்டியில் பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்னால் சேலத்தில் இருந்து மதுரையை நோக்கி பெயிண்ட் ஏற்றி சென்ற லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் லாரியில் இருந்த பெயிண்ட் ரோட்டில் கொட்டி இருந்தது. அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் வழுக்கி விழுந்து காயம் அடைந்தனர்.

இதனை பார்த்த வேடசந்தூர் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் தலைமை காவலர் ராஜேந்திரன் களத்தில் இறங்கி தனக்கு பணி நேரம் முடிந்தும் வீட்டுக்குச் செல்லாமல் பெயிண்டை அப்புறப்படுத்தி மேலும் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் விபத்தில் சிக்காமல் பாதுகாத்தார்.

போலீஸ் ராஜேந்திரனின் செயலை அப்பகுதியினர் பெரிதும் பாராட்டி சென்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *