Headlines

ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறப்பு.

ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறப்பு

செப் 9 கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநில உணவு ஆணையத் தலைவர் மற்றும் கழகத் தணிக்கைக்குழு உறுப்பினர், முன்னாள் அமைச்சர் திரு. என். சுரேஷ்ராஜன் அவர்கள் வழங்கிய கோரிக்கை மனுவின் அடிப்படையில், உடனடி தீர்வு காண மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு மா. சுப்பிரமணியன் அவர்கள் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம் மாவட்ட மக்களுக்கு விரைவில் மேம்பட்ட சிகிச்சை வசதி கிடைக்கப்போகிறது.

மாவட்ட மக்களின் சார்பில், இந்த முயற்சிக்காக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை திரு. சுரேஷ்ராஜன் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.

குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *